tag:blogger.com,1999:blog-42706355966027167232024-02-09T01:28:15.209+05:30tamilgenocide தமிழீழம்Unknownnoreply@blogger.comBlogger177125tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-27929995749733491302011-04-30T19:41:00.003+05:302011-04-30T19:41:58.283+05:3001 பெப்ரவரி 2009 மக்கள் பாதுகாப்பு வலயம்" பகுதியில் இன்று படையினரின் எரிகுண்டு தாக்குதலில் 26 தமிழர்கள் உடல் கருகி பலி: 52 பேருக்கு எரிகாயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">மக்கள் பாதுகாப்பு வலயம்" பகுதியில் இன்று படையினரின் எரிகுண்டு தாக்குதலில் 26 தமிழர்கள் உடல் கருகி பலி: 52 பேருக்கு எரிகாயம்</div><div class="heading"> </div><div class="date">[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/artilary011.jpg" /></div>முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான மூங்கிலாறு, தேவிபுரம், சுதந்திரபுரம் மற்றும் தேராவில் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் மட்டும் 26 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர்.</div>இன்றைய தாக்குதல்களில் எரிகாயங்களை ஏற்படுத்தும் குண்டுகளை சிறிலங்கா படையினர் பொதுமக்களை நோக்கி பிரயோகித்து இருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது<br />
இன்றைய தாக்குதல்களில் கொல்லப்பட்ட அனைவரும் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தோர் எல்லோருமே கடுமையான எரிகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.<br />
<strong>மூங்கிலாறு</strong><br />
முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 13 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.<br />
<strong>தேவிபுரம்</strong><br />
முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடாத்திய தாக்குதலில் 6 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். <br />
<strong>சுதந்திரபுரம்</strong><br />
முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய தாக்குதலில் 7 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர். <br />
<strong>தேராவில்</strong><br />
முல்லைத்தீவு தேராவில் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் 4 தமிழர்கள் காயமடைந்துள்ளனர். <br />
சிறிலங்கா படையினரின் இந்த தாக்குதல்களினால் மக்களின் பெருமளவிலான வீடுகள், வாகனங்கள், வணிக நிறுவனங்கள் என்பன முற்றாக அழிவடைந்தும், சேதமடைந்தும் உள்ளன. <br />
<br />
சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களுக்குத் தப்புவதற்காக மக்கள் பெரும் அவலப்பட்டு பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்து ஓடுகின்ற சூழ்நிலையிலேயே, அவர்கள் மீது இவ்வாறான படுகொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-78680947285045415812011-04-30T19:41:00.001+05:302011-04-30T19:41:13.015+05:3001 பெப்ரவரி 2009 வன்னியில் இருந்து கொண்டு வரப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 167 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="news"> <div class="heading">வன்னியில் இருந்து கொண்டு வரப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 167 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.</div><div class="heading"> </div><div class="date">[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/eelam/people/1108_04_murasumoddayi.jpg" /></div>வன்னியில் இருந்து கொண்டு வரப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் விபரம் என குறிப்பிட்டு வவுனியா வைத்தியசாலையின் நுழைவாயில் சுவரில் ஒட்டப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலில் 167 பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.</div><div class="remainder">சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அன்றைய தினம் 226 நோயாளர்களும், 139 உறவினர்களான உதவியாளர்களும் அந்தச் சங்கத்தினரால் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. <br />
<br />
ஆயினும் வவுனியா பொது வைத்தியசாலை பொது மக்களுக்கான அதிகாரபூர்வமான அறிவித்தலின் மூலம் 167 பேரே வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்ட 226 பேரில் மிகுதியானவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. நோயாளர்களுடன் உதவிக்காக வந்த உறவினர்களான 139 பேரும் வவுனியா நெளுக்குளம் இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. <br />
<br />
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த 167 பேரின் விபரங்கள் வருமாறு: <br />
<br />
விமலாதேவி (வயது46 )புதுக்குடியிருப்பு,வி.விந்துஷா (வயது28 )புதுக்குடியிருப்பு,சேஷனா (வயது03 ),எஸ். செல்வரஞ்சினி (வயது23) கிளிநொச்சி,என். பவளமணி (வயது52) விசுவமடு,ஜே. சரஸ்வதி (வயது47 )திருவையாறு,ஜே. சத்தியபாமா (வயது29 )அம்பாள்புரம் கிளிநொச்சி,எஸ். தர்சிகா (வயது15) தர்மபுரம்,எஸ். சரஸ்வதி (வயது63) சுதந்திரபுரம்,கே. கஜேந்தினி (வயது16) சுதந்திரபுரம் <br />
<br />
ஆர். மகேஸ்வரி (வயது37) தேவிபுரம் ,பி. ஜெனிஸ் (வயது29) முள்ளியவளை,ஆர். நகுலன் (வயது33) விசுவமடு,கே. யோகலிங்கம் (வயது42) சுதந்திரபுரம்,சேனாதிராஜா (வயது62 )அனந்தர்புளியங்குளம் நெடுங்கேணி,எஸ். பேரின்பகரன் (வயது33 )பளை,பி. சஜீவன் (வயது16),திருநகர்,எஸ். கபிலன் (வயது17 )நட்டாங்கண்டல்,கே. இரட்னநாயகம் (வயது59 )உடையார்கட்டு,கே. வினோதன் (வயது34) மூங்கிலாறு. <br />
<br />
எஸ். கிருஸ்ணகுமார் (வயது44) கோணாவில்,எம். இராஜேந்திரன் (வயது38) முரசுமோட்டை,ஆர். கதிர்காமநாதன் (வயது32) விசுவமடு,ஆர். குகதாசன் (வயது33) நல்லூர் பூனகரி,வை. யோகேஸ்வரன் (வயது30) கிழவிகுளம் பாலமோட்டை,எம். நாகராஜா (வயது45 )ஜெயபுரம்,அந்தோனி (வயது60),எஸ். செல்வரூபன் 28ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,எஸ். சுகந்தன் (வயது29) சுதந்திரபுரம் ,எம். ரவிச்செல்வன் (வயது32) சுதந்திரபுரம் ,எஸ். விக்கினராஜா (வயது52 )சுவிச்செந்தல், வட்டக்கச்சி. <br />
<br />
இராமநாதன் பஞ்சலிங்கம் (வயது43) விசுவமடு,கே. நடராசா (வயது69) திருவையாறு,ரி. கிஷாந்த் (வயது12 )திருவையாறு,எம். செல்வராஜா (வயது50) முள்ளிக்குளம், மடு,வை. காண்டீபன் (வயது16) உடையார்கட்டு ,கே. ஜீவன் (வயது28) நெடுங்கேணி,ஆர். பார்த்திபன் (வயது14 )கற்சிலைமடு, பேராறு,எம். உதயபாலா 40 உடையார்கட்டு,கே. கனகலிங்கம் (வயது54) ஒலுமடு,எஸ். உதயசூரியன் (வயது42) கணேசபுரம், கிளிநொச்சி,பி. பிரவானந்தம் (வயது30) நெடுங்கேணி,ஆர். நிஷாந்தினி (வயது22) உடையார்கட்டு. <br />
<br />
சிவகௌரி (வயது38) விசுவமடு,சுலக்ஷன் (வயது04) முள்ளியவளை,எம். அந்தோனியம்மா (வயது64 )கல்மடு,ஏ. வினிதா (வயது33 )கண்டாவளை,வை.வசந்தராணி (வயது42) விநாயகபுரம் கிளிநொச்சி,ஆர். பிரதீபா (வயது28 )வள்ளிபுனம்,ஆர். மதிவாணி (வயது08) ,தந்திரபுரம் ,ஜே. ஜெனிற்றா (வயது14) சுழிபுரம் யாழ்ப்பாணம்,கே. மதுஷா (வயது14 )கற்சிலைமடு ஒட்டுசுட்டான்,எல். ரதீஸ்வரி(வயது 24), 2ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,ஏ. மகேஸ்வரி (வயது18) தர்மபுரம் உழவனூர்,எம். அன்பரசன் (வயது07) வேலணை மேற்கு,எம். அகமதி (வயது11 )வேலணை மேற்கு,எம். சாந்தலட்சுமி (வயது39 )வேலணை மேற்கு. <br />
<br />
பழனியம்மா (வயது50) 2ம் கட்டை திருநகர்,எம். பூபதியம்மா (வயது75) வள்ளிபுனம் ,என். நிரோஷா (வயது16 )வள்ளிபுனம்,ஏ. சீதா (வயது29 முழங்காவில்,எஸ். டிலக்ஷன் (வயது12) சுதந்திரபுரம் ,கே. யோகலிங்கம் (வயது44 )புதுக்குடியிருப்பு ,எஸ். குகாகரன் (வயது13 )புதுகுடியிருப்பு, (அனுராதபுரம் வைத்தியசாலை),ஜீ. ஞானசிறி (வயது28 )மூங்கிலாறு,ஏ. சில்வஸ்டர் (வயது33) ,இமானுவேல் ஆனந்தராஜ் (வயது48 )சுதந்திரபுரம் ,ஜோசப் லியோன் (வயது17) அம்பாள்குளம்,பி. மகேஸ்வரன் (வயது32 )புதுக்குடியிருப்பு,எம். ரவிசங்கர் (வயது14) வவுனிக்குளம் ,எஸ். ரிஷாலினி (வயது19 )சுதந்திரபுரம் ,ஐ. ஜெயராஜா (வயது42) வட்டக்கண்டல். <br />
<br />
எம். சைதனியா (வயது17) வட்டக்கச்சி,ஆர். துஷாந்தினி (வயது27 )முதலாம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,எஸ். ஆன் டிலக்ஷி (வயது11) வள்ளிபுனம்,எம். மதியழகன் (வயது07) முரசுமோட்டை,கே. திருமகள் (வயது32) முறிகண்டி,இ. கோவிந்தராஜன் (வயது30) குமுழமுனை,ஆர். மதிவண்ணன் (வயது12 )சாந்திபுரம் ,ஐ. சசிகரன் (வயது18 )வட்டக்கச்சி,பி. லனோஜன் (04 மாதம்) 2ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,ப. தனுஷா (வயது35) 2ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,பி. அருந்ததி (வயது42) முள்ளிவாய்க்கால்,என். பாலேஸ்வரன் (வயது31) 2ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,எஸ். அன்னலட்சுமி (வயது25) பிள்ளையார் கோவிலடி உடையார்கட்டு,டி. வினோசிகா (வயது15) சுதந்திரபுரம் உடையார்கட்டு. <br />
<br />
நவரத்தினம் விஜயரூபன் (வயது40 )தேவிபுரம்,எம். அமிர்தவள்ளி (வயது61), எம் கோபாலகிருஷ்ணன் (வயது46 )வவுனியா,கே. சனுஜா (வயது06 )சுதந்திரபுரம் ,என். ஆனந்தன் (வயது38 )சன்னாசிபரந்தன் ,எம். கிருஷ்ணன் (வயது05) வற்றாப்பளை,எம். கீர்த்தனன் (வயது13 )வற்றாப்பளை,எம். ஜெகதாம்பாள் (வயது31 )கிருஷ்ணபுரம் கிளிநொச்சி,பி. ரம்மியா (வயது17 )திருநகர்,எஸ். பிரதீபன் (வயது26) கண்ணகிபுரம் விசுவமடு,எஸ். மயூரன் (வயது15) மருதநகர்,எஸ். அபிநயா (1 1/2 வயது) வள்ளிபுனம் ,எஸ். செரான் 3 மாதம் மூங்கிலாறு,எம். மங்கலராஜா 35 ஜெயபுரம் ,எஸ். ராஜேஸ்வரி (வயது50 )சுதந்திரபுரம் ,எம். யதுஷா (வயது06) கிளிநொச்சி,ஆர். செல்வராஜா 33 மல்லாவி. <br />
<br />
கே. கவிதாஸன் (வயது30 )புதுக்குடியிருப்பு,எஸ். ஜெயாநந்தன் (வயது27) 5ம் யுனிட் இராமநாதபுரம்,ஏ. ரகுவரன்(வயது 29) வற்றாப்பளை,பி. ரதி (வயது42) புதுக்குடியிருப்பு,டி. செபஸ்தியான்பிள்ளை (வயது51 )உடையார்கட்டு,எம். மகிழினி (வயது13) மருதங்கேணி தாளையடி,பி. மயூரிஷா (வயது09 )மருதங்கேணி தாளையடி,கே. யோகலிங்கம்(வயது 44 )புதுக்குடியிருப்பு,கே. அன்புராஜா (வயது61 )நெளுக்குளம் முகாம்,கே. குணசீலன் (வயது30 )நெளுக்குளம் முகாம்,வீ. விந்துஜன் (வயது04 )நெளுக்குளம் முகாம் ,சீ. கோமதி (வயது33 )பல்லவராயன்கட்டு,சீ. கிருஷா (வயது08 )பல்லவராயன் கட்டு கே. சோமசுந்தரம் (வயது83 )1ம் யுனிட் முரசுமோட்டை,ஏ. பிரன்சி (வயது28) நெத்தலியாறு,எம். ஸ்தேவாம் (வயது22) ஹட்சன் ரோட் வட்டக்கட்சி,எஸ். கமலாதேவி (வயது65) கனகபுரம் கிளிநொச்சி,பி. புஸ்பராணி(வயது 61) செட்டியார் தெரு பருத்தித்துறை,கே. சரோஜினிதேவி (வயது33) 3 வட்டாரம் முரசுமோட்டை,எஸ். சர்வானந்தன் (வயது26 )உருத்திரபுரம்,எஸ். அந்திரேஸ் (வயது60 )ராமநாதபுரம்,வி. காசிநாதன் (வயது34) கண்டாவளை,எஸ். குமுதினி (வயது11) லோட்டஸ் ரோட் வண்ணார்பண்ணை. <br />
<br />
எஸ். சிந்துஜன் (வயது08 )லோட்டஸ் ரோட் வண்ணார்பண்ணை,எஸ். ஜிந்துஜன் (வயது06 )லோட்டஸ் ரோட் வண்ணாரபண்ணை,ப. தினேஷ்ரூபன் (வயது24) பள்ளிக்குடா பூனகரி,அல்வின் அனுரா (வயது29 )ஐயனார்கோவிலடி முரசுமோட்டை,பெரியசாமி இளநிதா (வயது10 )மாணிக்கபுரம் விசுவமடு,எஸ். ரவீந்திரன் சுதந்திரபுரம் விசுவமடு,கண்ணகியம்மா (வயது60 ரெட்பானா),எஸ். சுபாஜினி (வயது30) கணுக்கேணி,சண்முகரட்ணம் உதயகுமார் (வயது27) முரசுமோட்டை. <br />
<br />
என். வினோத் (வயது16) விசுவமடு,பி. யோகலிங்கம் (வயது55) ராமநாதபுரம் ,கே. மாணிக்கம் (வயது32) தேவிபுரம் ,ரீ. தங்கராசா (வயது37) ரெட்பானா,ரீ. கணேஷ் (வயது10) ரெட்பானா,எஸ். தினோஜா (வயது13) உடையார்கட்டு,பி. யசோதாதேவி (வயது40) வள்ளிபுனம்,பி. கிருஜா (வயது20) திருநகர்,எஸ. கணேசமூர்த்தி (வயது49 )ராமநாதபுரம் ,எம். சுரேஷ் (வயது24 )முள்ளிவாய்க்கால்,எஸ். லக்சனா (வயது13 )கனகராயன்குளம் ,ஜே. மகேந்திரன் (வயது55 )புதுக்குடியிருப்பு,வை. விதுஷன் (வயது08) சுதந்திரபுரம் ,வை. தேன்மொழி (வயது50) ராமநாதபுரம். <br />
<br />
பி. யோகேந்திரன் (வயது25 )திருநகர்,ஏ. விஜயபாலகிருஷ்ணன் (வயது39 )யோகபுரம் மல்லாவி,ரீ. சுவர்ணன் (வயது25) முள்ளிவாய்க்கால்,வி. செல்லத்துரை (வயது70) கனகராயன்குளம்,எஸ். சிவதாசன் (வயது16) சுதந்திரபுரம்,எஸ். கந்தையா (வயது79) 4 ஆம் கட்டை பேராறு,கே. நாகமணி (வயது83 )புதுக்குடியிருப்பு,தம்பிப்பிள்ளை ராசரட்ணம் (வயது73) திருநகர் ,எஸ். கிருஷ்ணாதேவி (வயது57) வட்டக்கச்சி,ஜே. ஜெயராணி (வயது45) நெளுக்குளம் முகாம் ,எஸ். அகல்விழி (1 1/2 மாதக்குழந்தை) முதலாம் வட்டாரம் முள்ளியவளை,எஸ். சர்மிகா (வயது3) 1ம் வட்டாரம் முள்ளியவளை. <br />
<br />
மேரி சதுர்ஷி (6 மாதம்) இரணைப்பாலை புதுக்குடியிருப்பு,ரீ. விதுஷன் (வயது4) வள்ளிபுனம்,எஸ். சுமிதா (வயது2) நெளுக்குளம் முகாம் ,ஆர். வித்தியா (வயது27) 2ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,ஜீ. தனலட்சுமி (வயது29) இரணைப்பாளை,சிவாஜினி (10 நாள் )வள்ளிபுனம் ,ஆர். பாக்கியராஜா (வயது55) இலுப்பைக்கடவை.</div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-29439642514915431152011-04-30T19:39:00.001+05:302011-04-30T19:39:17.683+05:3003 பெப்ரவரி 2009 உடையார்கட்டு மருத்துவமனை மீது படையினர் எறிகணை தாக்குதல்: தாதி ஒருவர் பலி; ச.செ.சங்க பணியாளர் உட்பட 10 பேர் காயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">உடையார்கட்டு மருத்துவமனை மீது படையினர் எறிகணை தாக்குதல்: தாதி ஒருவர் பலி; ச.செ.சங்க பணியாளர் உட்பட 10 பேர் காயம்</div><div class="heading"> </div><div class="date">[ செவ்வாய்க்கிழமை, 03 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/eelam/people/02_02_09_icrc.jpg" /></div>தற்காலிகமாக இயங்கும் உடையார்கட்டு மருத்துவமனை (கிளிநொச்சி மருத்துவமனை) மீது நேற்று திங்கட்கிழமை படையினர் செலுத்திய 3 எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததினால் மருத்துவமனை தாதி ஒருவர் பலியானார். மேலும் அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கப் பணியாளர் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.</div>எதுவித உதவிகளுமின்றி அவதிப்படும் அப்பாவிப் பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வரும் புதுக்குடியிருப்பு , உடையார்கட்டு ஆகிய இரண்டு மருத்துவமனைகள் மீதும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணைத் தாக்குதல் அடுத்தடுத்து நடத்தியுள்ளனர். <br />
உடையார்கட்டு வைத்தியசாலை மீது நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரான தவராசா கஜேந்தினி அந்த இடத்தில் துடிதுடித்து மரணமானார். மற்றும் இருவர் ஆஸ்பத்திரிக்குள் பலியாகினர்.<br />
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ரி.சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்தார்.<br />
வைத்தியசாலையில் மூன்று ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன. இரண்டாவது ஷெல் வெடித்ததில் தாதிய உத்தியோகத்தர் கொல்லப்பட்டார். அங்கு நோயாளர்களுக்கு அவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோதே அவர் கொல்லப்பட்டுள்ளார். <br />
தொடர்ச்சியான எறிகணை தாக்குதல் காரணமாக காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதிலும் போக்குவரத்திற்கு பெரும் சிரமங்களுக்குள்ளாகியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.<br />
<div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/02_02_09_icrc.jpg" /></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-60682594181057169552011-04-30T19:37:00.001+05:302011-04-30T19:37:52.650+05:3003 பெப்ரவரி 2009 புதுவகை எரிகுண்டுகள்; இன்று (செவ்வாய்) மட்டும் வன்னியில் 58 தமிழர்கள் படுகொலை 84 பேர் காயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">புதுவகை எரிகுண்டுகள்; இன்று (செவ்வாய்) மட்டும் வன்னியில் 58 தமிழர்கள் படுகொலை 84 பேர் காயம்</div><div class="heading"> </div><div class="date">[ செவ்வாய்க்கிழமை, 03 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/defence_stuffs/multy_baral_gun.jpg" /></div>"மக்கள் பாதுகாப்பு வலயம்" என தானே அறிவித்து இடம்பெயர்ந்த மக்களை சுதந்திரபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அடைக்கலம் புக வைத்த பின்னர் - சிறிலங்கா படைகள் தொடர்ச்சியாக நடத்தும் கடுமையான பீரங்கி எரிகுண்டுத் தாக்குதல்களில் இன்று செவ்வாய் மட்டும் 58 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 84 பேர் காயமடைந்துள்ளனர்.</div><div class="remainder">மேலும், இப்போது, சிறிலங்கா படையினர் பாவிக்கும் பீரங்கிக் குண்டுகள் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் ஒரு வகை எரிகுண்டுகளாக இருப்பதாக கூறப்படுகிறது <br />
<br />
50 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்களும், மேலும் 10 ஆயிரம் வரையான ஏற்கனவே குடியிருந்த மக்களும் வாழ்ந்து வந்த சுதந்திரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை வரை சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். <br />
<br />
இன்றைய இந்த தாக்குதலில் 58 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 84 பேர் காயமடைந்துள்ளனர். <br />
இந்த பகுதியில் தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மீட்புப் பணிகள் சரிவர செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், மீட்புப் பணிகள் முழுமையாக முடிவடையும் போது கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களினதும் எண்ணிக்கை இதனைவிட அதிகமாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.<br />
இதுவரை நடைபெற்ற மீட்புப் பணிகளில் 55 பேரினது உடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.<br />
<br />
அதேசமயம், புதுக்குடியிருப்பு நுண்கலைக் கல்லூரி மீது இன்று காலை 8:30 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதலில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். <br />
<br />
<strong>எரிக்கும் குண்டுகள்</strong> <br />
<br />
இதேவேளை, சிறிலங்கா படையினர் தற்போது ஏவும் பீரங்கி எறிகணைகள் யாவுமே வீழ்ந்து வெடிக்கும் இடத்தில் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் தன்மையுடையதாக கூறப்படுகிறது <br />
<br />
மனித உடல்களோ, மரங்களோ, கட்டடங்களோ, வாகனங்களோ எதுவாயிருந்தாலும் பற்றி எரிகின்றது. இதனால், அண்மைக்காலங்களில் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகின்றவர்கள் எல்லோருமே உடல் கருகி உயிரிழப்பதுடன், காயமடைகின்றவர்களும் மிகக் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகின்றனர் <br />
<br />
சிறிலங்கா படைகள் ஏவும் இந்த எறிகணைகள், எல்லாவற்றையும் எரித்துக் கருக்கும் தன்மை உடையவையாக இருப்பினும் இந்த எறிகணைகள் சரியாக எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை இன்னமும் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும் கூறப்படுகிறது.</div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-84448833028244744372011-04-30T19:35:00.002+05:302011-04-30T19:35:34.548+05:3005 பெப்ரவரி 2009 வன்னியில் நேற்றும் (புதன்கிழமை) சிறிலங்கா படையினரின் எறிகணை தாக்குதலில் 13 தமிழர் பலி; 36 பேர் காயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">வன்னியில் நேற்றும் (புதன்கிழமை) சிறிலங்கா படையினரின் எறிகணை தாக்குதலில் 13 தமிழர் பலி; 36 பேர் காயம்</div><div class="heading"> </div><div class="date">[ வியாழக்கிழமை, 05 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/eelam/people/wa_04.JPG" /></div>வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று புதன்கிழமை நடத்திய எறிகணை தாக்குதல்களில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர்.</div><div class="remainder">அதேவேளை, வன்னியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொல்லப்பட்ட தமிழர்களின் உடலங்கள் தொடர்ந்து வந்து குவிவதாகவும் அங்கிருந்து கடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. <br />
<br />
வன்னி பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறிலங்கா படையினரின் பரவலான எறிகணை வீச்சுக்கள் காரணமாக படுகொலையான 22 தமிழர்களின் உடலங்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரத்துறை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.<br />
புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நேற்று புதன்கிழமை நான்காவது நாளாக நடத்திய கடுமையான எறிகணைத் தாக்குதலால் மருத்துவமனையின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டு விட்டன. <br />
<br />
மருத்துவமனையின் முதன்மைப் பகுதிகளான வெளிநோயாளர் பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதிகள் என்பன எறிகணைத் தாக்குதல்களில் நாசமாகிவிட்டன. இதனால் அந்த மருத்துவமனை இனி இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. <br />
<br />
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க குழுப் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் நிலைகொண்டிருந்த போதிலும் கூட மருத்துவமனை மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. <br />
மருத்துவமனைகளைத் தாக்கக்கூடாது என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழு மற்றும் அனைத்துலக நாடுகள் வலியுறுத்திய பின்னரும் சிறிலங்கா படையினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். <br />
300 மீற்றர் பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த பின்னரும் மருத்துவமனை மீது தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. <br />
<br />
நேற்றைய தாக்குதல்களின் போது, ஏற்கனவே சிறிலங்கா படையின் எறிகணைத் தாக்குதலில் காயமடைந்து புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். அ.வசந்தகுமார் (வயது 26) மற்றும் ப.மதன்ராஜ் (வயது 19) ஆகிய இருவருமே படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர். அறுவைச் சிகிச்சைக் கூடம் மீது வீழ்ந்த சிறிலங்கா படையின் பீரங்கி குண்டிலேயே இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். <br />
<br />
மேலும், கடந்த ஜனவரி 30 ஆம் நாள் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் படுகாயமடைந்து புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமலச்செல்வன் கஸ்தூரி (வயது 26) நேற்றைய தாக்குதலின் போது அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.<br />
<br />
அதேநிலையில் வன்னியில் நேற்று புதன்கிழமை சிறிலங்கா படையினரின் இந்த எறிகணை வீச்சுக்களின் போது காயமடைந்த பெருமளவிலான பொதுமக்கள் ஆங்காங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். <br />
சுதந்திரபுரம் மருத்துவமனைக்கு நேற்று மாலை 5:00 மணி வரையிலும் காயமடைந்த 44 பொதுமக்களும், உடையார்கட்டு மருத்துவமனைக்கு 14 பொதுமக்களும் கொண்டு வரப்பட்டுள்ளனர். <br />
இவ்வாறு காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஏராளமானோர் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. <br />
அதில் ஒரு வயதுடைய குழந்தை ஒன்றும் அடங்குவதாகவும், அந்த குழந்தையின் தாய் முன்னரே எறிகணை வீச்சில் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இறந்துவிட்டார். அவரது மற்றுமொரு குழந்தையும் ஏற்கெனவே பீரங்கி தாக்குதலில் இறந்து விட்டது எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார். <br />
<br />
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அம்பலவன்பொக்கணை பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலின் போது 4 சிறுவர்கள் உட்பட 10 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 36 பேர் காயமடைந்துள்ளனர். <br />
<br />
சா.சுதாஸ் (வயது 05) <br />
பாலசேகரம் கஜேந்திரன் (வயது 10) <br />
பாலசேகரம் கஜானா (வயது 13) <br />
செல்வநாயகம் கிளி (வயது 31) <br />
சின்னப்பு இராசமலர் (வயது 56) <br />
சின்னப்பு கெங்காதரன் (வயது 45) <br />
பொ.ஜீவமலர் (வயது 53) <br />
ஆகியோரே படுகொலை செய்யப்பட்டோர் ஆவர். <br />
<br />
கொல்லப்பட்ட மேலும் மூவரின் உடலம் சிதறிக் கிடப்பதினாலும், அவர்கள் இடம்பெயர்ந்து வந்தவர்களாய் இருப்பதனாலும் அவர்களின் பெயர் விபரங்களை உடனடியாக பெறமுடியவில்லை. அத்துடன்<br />
<br />
மதன் மபிசன் (வயது 04) <br />
தமிழ்மாறன் சர்மிகா (வயது 09) <br />
கெங்காதரன் பாலதரணி (வயது 06) <br />
கெங்காதரன் தர்மேஸ் (வயது 08) <br />
சிவநேசன் (வயது 30) <br />
த.சாந்தநேசன் (வயது 37) <br />
கோ.மகேந்திரம் (வயது 47) <br />
மகேந்திரம் இராசமலர் (வயது 47) <br />
சௌந்தரராசா சறோஜினிதேவி (வயது 45) <br />
அன்ரன் மேரிமலர் (வயது 30) <br />
புஸ்பராசா ரேணுகாதேவி (வயது 28) <br />
செல்வராசா புஸ்பராஜா (வயது 30) <br />
தினகரன் சின்னத்தம்பி (வயது 55) <br />
வல்லிபுரம் கோமதி (வயது 30) <br />
தமிழ்மாறன் மேனகா (வயது 29) <br />
தர்மராசா வாகீசன் (வயது 23) <br />
யோசப் டில்லிமலர் (வயது 63) <br />
செபமாலை விக்ரர் (வயது 72) <br />
சின்னத்துரை தனராசா (வயது 50) <br />
தனராசா புஸ்பராணி (வயது 45) ஆகியோர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்.<br />
<div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/wa_01.JPG" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/wa_02.JPG" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/wa_03.JPG" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/wa_04.JPG" /></div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-50711712739634059442011-04-30T19:33:00.002+05:302011-04-30T19:33:21.838+05:3006 பெப்ரவரி 2009 வன்னியில் தமிழர் படுகொலை தொடர்கின்றது: இன்றும் (வெள்ளிக்கிழமை) 48 தமிழர்கள் பலி்; 174 பேர் காயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="news"> <div class="heading">வன்னியில் தமிழர் படுகொலை தொடர்கின்றது: இன்றும் (வெள்ளிக்கிழமை) 48 தமிழர்கள் பலி்; 174 பேர் காயம்</div><div class="heading"> </div><div class="date">[ வெள்ளிக்கிழமை, 06 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/defence_stuffs/artilary013.jpg" /></div>வன்னியில் இன்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர் பரவலாக நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 174 பேர் காயமடைந்துள்ளனர். </div><div class="remainder"><strong>மாத்தளன்</strong> <br />
<br />
முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் ஆட்லறி பீரங்கித் தாக்குதலில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 13 பேர் காயமடைந்துள்ளனர். <br />
<br />
<strong>தேவிபுரம் </strong><br />
முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் இன்று நண்பகல் 12:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் சிறுவர்களான சகோதரர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். <br />
<br />
இதேவேளை, தேவிபுரம் ஆற்றங்கரைப் பகுதியில் இடம்பெயர்ந்து தங்கியிருந்த மக்களின் குடிசைகள் மீது இன்று முழு நாளும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர். <br />
<br />
<strong>சுதந்திரபுரம் </strong><br />
முல்லைத்தீவு சுதந்திரபுரம் 100 வீட்டுத்திட்டம் மீது இன்று பிற்பகல் 4:35 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய ஆட்லறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதலில் 6 தமிழர்களை படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர். <br />
<br />
<strong>மூங்கிலாறு </strong><br />
முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதி மீது இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். <br />
<br />
<strong>உடையார்கட்டு </strong><br />
முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியதில் 8 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். <br />
<br />
<strong>வள்ளிபுனம்</strong> <br />
<br />
முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதி மீது இன்று முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 14 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். <br />
<br />
மேலும் மூங்கிலாறு, உடையார்கட்டு, வள்ளிபுனம் ஆகிய மூன்று இடங்களிலும் நடந்த தாக்குதல்களில் மட்டும் மொத்தமாக 64 பேர் காயமடைந்துள்ளனர்.</div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-13056828731233085682011-04-30T19:32:00.001+05:302011-04-30T19:32:28.979+05:3007 பெப்ரவரி 2009 பொன்னம்பலம் மருத்துவமனை மீது வான் தாக்குதல்: 61 நோயாளர் பலி; 12 பேர் படுகாயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">பொன்னம்பலம் மருத்துவமனை மீது வான் தாக்குதல்: 61 நோயாளர் பலி; 12 பேர் படுகாயம்</div><div class="heading"> </div><div class="date">[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/others/Puthu1015_01_445.jpg" /></div>புதுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை மீது நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் சிறீலங்கா வான்படையினர் அகோர வான் தாக்குதலை நடத்தியுள்ளனர்.இதில் 61 வரையான நோயாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.</div><div class="remainder">இதில், அங்கு காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் இருந்த நிலைலேயே மருத்துவமனை முற்றாக அழிக்கப்பட்டு விட்டது.<br />
<br />
இந்த நோயாளர்களில் பெருமளவிலானோர் தமது உறவினர்களின் தொடர்புகளை இழந்து, அவர்களின் தொடர்பிற்காக காத்திருந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கின்றார். <br />
இத்தாக்குதலின் போது வீதியால் சென்று கொண்டிருந்த 12 பேர் காயமடைந்துள்ளனர்.<br />
<br />
இந்த மருத்துவமனை வளாகத்தின் மீது நடைபெற்ற வான் தாக்குதலின் தொடர்ச்சியாக சிறிலங்கா படையினர் தொடர்ந்து எறிகணைத் தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பதால் மீட்புப் பணிகளை சரிவரச் செய்ய முடியாது இருக்கின்றது.<br />
<br />
ஆரம்பகட்ட தகவலின்படி 40 நோயாளர் கொண்ட விடுதியில் இருந்த நோயாளர்களும் ஏனையோருமாக 61 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. <br />
<br />
இவ் வைத்தியசாலை 1996 ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இயங்கி வருவதாகவும் அரசசார்பற்ற நவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/Puthu1015_01_445.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/hospPk_2_445.jpg" /></div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-69776290767394843262011-04-30T19:31:00.002+05:302011-04-30T19:31:47.728+05:3007 பெப்ரவரி 2009 வன்னி பகுதிகளில் இன்றும் (சனி) படையினர் ஆட்லறி கொத்துக் குண்டு தாக்குதல்: 65 தமிழர்கள் பலி; 226 பேர் காயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="news"> <div class="heading">வன்னி பகுதிகளில் இன்றும் (சனி) படையினர் ஆட்லறி கொத்துக் குண்டு தாக்குதல்: 65 தமிழர்கள் பலி; 226 பேர் காயம்</div><div class="heading"> </div><div class="date">[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/defence_stuffs/artilary003.jpg" /></div>வன்னியின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமையும் சிறிலங்கா படையினர் ஆட்லெறி பீரங்கிகள் மூலம் கொத்துக்குண்டுத் தாக்குதல்களை நடத்த தொடங்கியுள்ளனர். இத்தாக்குதல்களில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 226 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.<br />
</div><div class="remainder">ஆட்லெறி பீரங்கியின் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்ற போது அவற்றுக்குள்ளிருந்து சிறிய குண்டுகள் 50 மீற்றருக்கும் கூடுதலான விட்டப் பகுதிக்கு பறந்து சென்று குறித்த நேரத்தில் வெடித்து பாரிய அழிவுகளை ஏற்படுத்துகின்றன. <br />
<br />
<strong>தேவிபுரம்</strong> <br />
<br />
முல்லைத்தீவு - தேவிபுரம் பகுதியில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீதும், மக்கள் குடியிருப்புக்கள் மீதும் இன்று சனிக்கிழமை, சிறிலங்கா படையினர் 2 மணி நேரமாக நடத்திய எறிகணைத் தாக்குலில் 21 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர். <br />
<br />
இதேவேளை, தேவிபுரம் - புதுக்குடியிருப்பு வீதியில், ஈருளிகளிலும், உந்துருகளிலும் மற்றும் ஊர்திகளிலும் மக்கள் செறிவாக இடம்பெயர்ந்து கொண்டிருந்த போது அவர்களை இலக்கு வைத்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 12:20 மணியளவில் சிறிலங்கா வான்படையின் "எஃப்-07" வானூர்திகள் மூலம் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. <br />
<br />
இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 48 பேர் காயமடைந்துள்ளனர். மக்கள் பயணித்துக் கொண்டிருந்த 6 ஈருளிகள், 4 உந்துருளிகள் என்பன முற்றாக அழிவடைந்துள்ளன. <br />
<br />
அப்பகுதி மீது தொடர்ந்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்துவதால் படுகாயமடைந்த மக்களை உடனடியாக மீட்டு சிகிச்சை வழங்க முடியாத அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன என தெரிவிக்கின்றனர்.<br />
இதே பகுதியை இலக்குவைத்து மீண்டும் பிற்பகல் 3:20 மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் மேலும் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர்.இதில் பொதுமக்களின் 2 உழுஊர்திகள் எரிந்து நாசமாகியுள்ளன. <br />
<br />
இதேவேளை தேவிபுரத்தில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 17 ஆல் உயர்ந்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 54 ஆல் உயர்ந்துள்ளது. கொல்லப்பட்டவர்களின் உடலங்களும் காயமடைந்தவர்களும் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். <br />
<br />
இதன்படி அங்கு கொல்லப்பட்ட தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆகவும் உயர்வடைந்துள்ளது.<br />
<br />
அதேவேளை, முல்லைத்தீவு இரணைப்பாலை, ஆனந்தபுரம், கைவேலி ஆகிய பகுதிகளில் நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 18 பேர் காயமடைந்துள்ளனர். <br />
<br />
மருத்துவமனைகள் மீது சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருவதனால் தற்போது வீதியோரங்களிலேயே மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மரங்களில் கீழ்தான் அறுவைச் சிகிச்சைகள் கூட நடைபெறுகின்றன என அங்கிருந்து கடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-58403554362508777042011-04-30T19:30:00.002+05:302011-04-30T19:30:55.873+05:3008 பெப்ரவரி 2009 வன்னியில் கடந்த 48 மணி நேரத்தில் வான், எறிகணை தாக்குதல்களில் 180 பொதுமக்கள் வரை பலியாகினர்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">வன்னியில் கடந்த 48 மணி நேரத்தில் வான், எறிகணை தாக்குதல்களில் 180 பொதுமக்கள் வரை பலியாகினர்</div><div class="heading"> </div><div class="date">[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/eelam/people/mullai_20090119002.jpg" /></div>இலங்கை இராணுவத்தினரால் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில், 48 மணித்தியாலங்களுக்குள் சுதந்திரபுரம், இருட்டுமடு, உடையார்கட்டு மற்றும் தேவிபுரம் ஆகிய பாதுகாப்பு வலயப் பிரதேசங்களில் படையினர் மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சுக்களில் மாத்திரம் 120 க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.</div>நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மாத்திரம் குறைந்தது 59 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் நேற்று சனிக்கிழமை மாத்திரம் 62க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்<br />
இதேவேளை வெள்ளிக்கிழமை இலங்கை விமானப்படை புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் வைத்தியசாலை மீது மேற்கொண்ட குண்டு தாக்குதல்களில் 61 நோயாளர்கள் கொல்லப்பட்டனர். <br />
எனினும் புதுக்குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட செல்வீச்சுக்களின் சேத விபரங்கள் தெரியவரவில்லை. <br />
புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தனுக்கு பொதுமக்கள் நடமாடும் பாதைகளில் கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான செல்வீச்சுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. <br />
இதில் உயிரிழந்த 8 உடலங்கள் சனிக்கிழமை காலை வீதியோரங்களில் காணக்கூடியதாக இருந்தது. இதில் பேரூந்து ஒன்று கைவிடப்பட்ட நிலையில் எறிகணை வீச்சில் சேதமடைந்தது. 2 உழவூர்திகள் தீக்கிரையாகின. <br />
புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு வீதியான வாகீசன் வீதியிலும் 4 உடலங்கள் மீட்கப்பட்டன. <br />
இதேவேளை பாதுகாப்பு வலயத்தில் உள்ள தேவிபுரம் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை இரவு 11.45க்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட, கிளஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் 9 பேர் பலியாகினர்.<br />
அத்துடன் சுதந்திரபுரம் வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட செல்வீச்சுக்களில் அந்த வைத்தியசாலையின் பணியாளர் ஒருவர் பலியானார். </div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-25408526673997353192011-04-30T19:07:00.002+05:302011-04-30T19:07:51.489+05:3008 பெப்ரவரி 2009 வன்னியில் சிறிலங்காவின் திட்டமிட்ட தமிழ் இன அழிப்பு தொடர்கிறது; இன்று (ஞாயிறு) மட்டும் 80 அப்பாவிகள் பலி, 200 பேர் காயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">வன்னியில் சிறிலங்காவின் திட்டமிட்ட தமிழ் இன அழிப்பு தொடர்கிறது; இன்று (ஞாயிறு) மட்டும் 80 அப்பாவிகள் பலி, 200 பேர் காயம்</div><div class="heading"> </div><div class="date">[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/eelam/people/vanni_20090208001.jpg" /></div>முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திபுரம் பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் இன்று நடத்திய கண்மூடித்தனமான கொலைத் தாக்குதலில், இதுவரை 80 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 200 பேர் காயமடைந்துள்ளதாகவும், தாக்குதல் நடைபெற்ற பகுதி கண்கொண்டு பார்க்க முடியாத அளவுக்கு பெரும் அவலம் மிகுந்ததாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </div><div class="remainder">சுதந்திரபுரம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியில் இருந்து பிற்பகல் 3:00 மணிவரை சிறிலங்கா படையினர் கடும் எறிகணைத் தாக்குதலை நடத்தினர். <br />
இரண்டு மைல் நீள தூரத்துக்கு, மிக நெருக்கமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தபோது, சிறிலங்கா வான்படை வேவு வானூர்தி வட்டமிட்டு நோட்டம் பார்த்துக்கொண்டிருக்கையில் இந்த பீரங்கித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. <br />
சிறிய மற்றும் நடுத்தர ஊர்திகளிலும் மற்றும் நடந்தும் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த வேளையில் மக்களை வேண்டும் என்றே இலக்கு வைத்து வெறித்தனமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. <br />
சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், பச்சிளம் குழந்தைகள் என பெருமளவு தமிழர்கள் உடல் சிதறிக் கொல்லப்பட, மேலும் பெருமளவிலானோர் படுகாயமடைந்து வீழ்ந்த பெரும் அவலம் அங்கு நிலவியது. <br />
வள்ளிபுனம் பகுதியில் பதுங்குகுழிக்குள் 3 பேர் பலியாகியும் 4 பேர் காயமுற்றிருந்து மீட்கப்பட்டுள்ளனர். <br />
பலியானவர்களில் 40 பேர் சிறுவர்களும், பெண்களும் என நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.<br />
<br />
கொல்லப்பட்டவர்களின் உடல்களையோ, அல்லது காயமடைந்து வீழ்ந்தோரையோ மீட்டு எடுக்க முடியாத அளவுக்கு சிறிலங்கா படையினர் தொடர்ந்து கடுமையான பீரங்கி தாக்குதல்களை நடத்தி வந்தனர் எனவும், இதனால் காயமடைந்தோரை மீட்க முற்பட்டவர்களும் காயங்களுக்கு உள்ளாகி வீழ்ந்தனர் எனவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.<br />
பிற்கல் 3:00 மணியளவில் எறிகணைத் தாக்குதல் ஓய்ந்து 7 மணித்தியாலங்களின் பின்பு காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டபோது, காயமடைந்த பலர் குருதிப்போக்கினால் இறந்து போயிருந்தனர். இறந்தவர்கள் போக, காயமடைந்த நிலையில் 200 பேர் மீட்கப்பட்டனர். <br />
<br />
காயமடைந்தோர் பலர் மீட்கப்பட்ட போதும் தற்போது மருத்துவமனைகள் எதுவும் வன்னியில் இல்லாத நிலையில் மரங்களின் கீழும், கொட்டகைகளின் கீழம், வெறும் பாய்களின் மீது வைத்தே அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. <br />
இருந்தாலும் மீட்புப் பணிகளை முழுமையாக செய்யப்பட முடியாத அளவுக்கு வன்னியில் எஞ்சியிருக்கும் ஒரே போக்குவரத்துப் பாதையான பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல்களை தொடர்ந்து நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. <br />
<br />
இன்று நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 80 என உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் மீட்புப்பணிகள் முழுமையாக நடைபெறாத நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. <br />
ஊர்திகள் பலவற்றின் மேல் பீரங்கிக் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததால், அவற்றில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த பல தமிழர்கள் குடும்பம் குடும்பமாக, ஒட்டுமொத்தமாக, அழிக்கப்பட்ட கொடுமைகளும் நிகழ்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.<br />
சிதறிய உடலங்களும், இரத்தச் சிதறல்களும், சிதறிய உடமைகளும், தீர்ப்பற்றி எரிந்து கொண்டிக்கும் ஊர்திகளுமாக, அந்த இடம் பெரும் அவலம் நிறைந்ததாகக் காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 500 குடிசை வீடுகளும் முற்றாக அழிவடைந்தன.<br />
<div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090208001.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090208002.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090208003.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090208004.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090208005.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090208006.jpg" /></div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-11613068507497569152011-04-30T19:05:00.002+05:302011-04-30T19:05:57.370+05:3010 பெப்ரவரி 2009 வன்னியில் திங்களன்று 36 தமிழர்கள் படுகொலை; 76 பேருக்கு படுகாயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">வன்னியில் திங்களன்று 36 தமிழர்கள் படுகொலை; 76 பேருக்கு படுகாயம்</div><div class="heading"> </div><div class="date">[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/eelam/people/vann23.jpg" /></div>வன்னியில் பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் எங்கும் நேற்றும் சிறிலங்கா வான் மற்றும் தரைப்படையினர் நடத்திய தாக்குதல்களில் 36 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 76 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</div><div class="remainder"> இதேவேளை, உறவினர்கள் யாருமற்ற நிலையில் இருந்த பல உடலங்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் அடக்கம் செய்துள்ளனர். <br />
<strong>சுதந்திரபுரம்</strong><br />
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம், வள்ளிபுனம், சுதந்திரபுரம், மாத்தளன் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை காலை முதல் சிறிலங்கா படையினர் பரவலாக எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். <br />
இத்தாக்குதலின் போது 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.<br />
கி.மனோன்மணி (வயது 60)<br />
ந.ஜெயசாந்தி (வயது 38)<br />
மு.அங்கமுத்து (வயது 58)<br />
ஆகியோர் கொல்லப்படடவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.<br />
ஒரு வயது குழந்தையான சுசீலா <br />
யோ.கவிந்தவி (வயது 09)<br />
யோ.விதுஸ்ணவி (வயது 13)<br />
ந.டயோலா (வயது 15)<br />
த.யோகா (வயது 19)<br />
கி.இராசமணி (வயது 65)<br />
இ.இராஜேஸ்வரி (வயது 39)<br />
பொ.கிருஸ்ணமூர்த்தி (வயது 32)<br />
மா.சாந்தகுமார் (வயது 25)<br />
விஜயலட்சுமி (வயது 46)<br />
க.மல்லிகாதேவி (வயது 48)<br />
இராஜசிறீ (வயது 28)<br />
ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். <br />
<strong>மாத்தளன் பகுதி</strong><br />
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் பகுதியில் நேற்று பிற்பகல் சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான பீரங்கித் தாக்குதலில் 16 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 49 பேர் படுகாயமடைந்துள்ளனர். <br />
இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்கியிருந்த கொட்டகைகளின் மீதே எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.<br />
இத்தாக்குதலின் போது ஒரு கொட்டகைக்குள் மட்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். <br />
மருத்துவமனைகள் செயலிழந்து விட்ட காரணத்தினால் மரங்களின் கீழும் தெருவோர காப்பகழிகளிலுமே காயமடைந்தோருக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.<br />
நிவாதேயினி (வயது 10)<br />
த.தமிழன்பன் (வயது 05)<br />
த.செல்வானந்த் (வயது 12)<br />
செ.தனஞ்சியன் (வயது 47)<br />
த.நகுலேஸ்வரி (வயது 42)<br />
செ.தயாபரன் (வயது 37)<br />
த.சுமதி <br />
ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.<br />
<strong>சிறிலங்கா வான்படை தாக்குதல்</strong><br />
இதேவேளை, சிறிலங்கா வன்படை நேற்று நடத்திய குண்டுத்தாக்குதலில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். <br />
இடம்பெயர்ந்த மக்கள் வாழும் கொட்டகைகளை இலக்கு வைத்தே குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. <br />
காயமடைந்தோரில்<br />
சடையன் வரதராசா (வயது 23)<br />
கணேசன் சுதாகரன் (வயது 25)<br />
இராமன் இராசன் (வயது 32)<br />
தயாபரன் பாலசுமதி (வயது 35)<br />
சிவநேசன் (வயது 36)<br />
ஆகியோரினது விபரங்கள் கிடைத்துள்ளன. <br />
<strong>நல்லடக்கம்</strong><br />
இதேவேளை, சுதந்திரபுரம் பகுதியில் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 15 தமிழர்களின் உடலங்கள் நேற்று தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்களால் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. <br />
இவற்றில் 12 உடலங்கள் உரிய உறவினர்கள் எவரும் இல்லாத நிலையிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளன. <br />
<div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vann20.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vann21.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vann22.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vann23.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vann24.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vann25.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vann26.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vann27.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vann28.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vann29.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vann30.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vann31.jpg" /></div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-77998317767106631962011-04-30T19:04:00.000+05:302011-04-30T19:04:02.276+05:3010 பெப்ரவரி 2009 படையினரின் புதிய வகைப் படுகொலை: இன்று 17 பேர் சுட்டுக்கொலை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">படையினரின் புதிய வகைப் படுகொலை: இன்று 17 பேர் சுட்டுக்கொலை</div><div class="heading"> </div><div class="date">[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/srilanka/defence/army/army007.jpg" /></div><div style="text-align: left;">நேற்று தற்கொலைத் தாக்குதல் எனப் புதிய கதையொன்றைக் கட்டவிழ்த்துவிட்டு, தப்பிவரும் மக்கள் மீது தமது வன்முறைக்கு வழிதேடிக்கொண்டுள்ள சிறீலங்காப் படையினர், இன்று நடத்திய தாக்குதலில் 17 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.</div></div><div style="text-align: left;">அகோர எறிகணை மற்றும் வான் தாக்குதலில் இருந்து தப்பி இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் பிரதேசம் நோக்கி நகர்ந்த மக்கள் மீது சிறிலங்கா இராணுவம் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலில் 17 பொதுமக்கள் பலியாகியுள்ளதுடன், சுமார் 69 பேர் வரை காயமடைந்துள்ளனர்.</div><div style="text-align: left;"><br />
</div><div style="text-align: left;">இடம்பெயர்ந்து வந்தவர்கள் மீது படையினர் தாக்குதலை நடத்திவிட்டு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளனர். இதன்போது கொல்லப்பட்ட இரு குழந்தைகள் உட்பட 17 பேரது உடலங்களை தாங்கள் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ள படைதரப்பு, 69 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.</div><div style="text-align: left;"><br />
</div><strong>அத்துடன், தற்போது படையினர் வசம் அகப்படுபவர்கள் தரம் பிரிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றனர். ஹிட்லிரின் இன அழிப்புக் காலத்தில் கைது செய்யப்பட்ட மக்கள் இவ்வாறே தரம் பிரிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டு பல்வேறு விதங்களில் படுகொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது</strong></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-91758096756225101902011-04-30T19:02:00.002+05:302011-04-30T19:02:22.589+05:3010 பெப்ரவரி 2009 வன்னியில் படையினர் இரவு நேர பீரங்கித் தாக்குதல்: இன்று (செவ்வாய்) மட்டும் 22 தமிழர்கள் படுகொலை; 87 பேருக்கு காயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="news"> <div class="heading">வன்னியில் படையினர் இரவு நேர பீரங்கித் தாக்குதல்: இன்று (செவ்வாய்) மட்டும் 22 தமிழர்கள் படுகொலை; 87 பேருக்கு காயம்</div><div class="heading"> </div><div class="date">[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/defence_stuffs/artilary011.jpg" /></div>வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து இரவு நேரத்தில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் இன்று 22 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 87 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் போதிய மருத்துவ வசதிகள் இன்றி பெரும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.</div><div class="remainder"><strong>தேவிபுரம்</strong> <br />
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம் மக்கள் வாழ்விடங்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2:15 மணி தொடக்கம் 3:15 மணி வரையான ஒரு மணி நேர கடும் இருட்டு நேரத்தில் சிறிலங்கா படையினர் 250-க்கும் அதிகமான எறிகணைகளை வீசித் தாக்கியுள்ளனர். <br />
இதன் போது 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர். <br />
<strong>சுதந்திரபுரம்</strong> <br />
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் பகுதியில் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது இன்று அதிகாலை சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் போது 4 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 32 பேர் காயமடைந்துள்ளனர். <br />
தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களினால் காயமடைகின்ற மக்கள், மருத்துவமனைகளும், போதியளவு மருத்துவ சிகிச்சைகளும் இல்லாத நிலையில் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-13645117544793660532011-04-30T19:00:00.002+05:302011-04-30T19:00:18.019+05:3012 பெப்ரவரி 2009 வன்னியில் படையினரின் எறிகணை வீச்சில் நேற்று (புதன்) 34 பொதுமக்கள் படுகொலை; 46 பேர் காயம்: மருத்துவமனை மீதும் தாக்குதல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="news"> <div class="heading">வன்னியில் படையினரின் எறிகணை வீச்சில் நேற்று (புதன்) 34 பொதுமக்கள் படுகொலை; 46 பேர் காயம்: மருத்துவமனை மீதும் தாக்குதல்</div><div class="heading"> </div><div class="date">[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/defence_stuffs/artilary_srilanka_army_in.jpg" /></div>முல்லைத்தீவு மாவட்டம் தேவிபுரம், வள்ளிபுனம் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 34 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 46 பேர் காயமடைந்துள்ளனர். </div><div class="remainder">படுகாயமடைந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்ட 15 பேர், போதிய மருத்துவ சிகிச்சை வசதிகள் ஏதும் அற்ற நிலையில் உயிரிழந்துள்ளனர். <br />
<br />
நீண்ட தூர போக்குவரத்து, சீரற்ற பாதை, மக்கள் பல்லாயிரக்கணக்கில் இடம்பெயர்ந்து கொண்டிருப்பதால் ஏற்பட்ட நெரிசல், சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் என்பவற்றால் காயமடைந்தோரை மருத்துவ சிகிச்சைக்கு எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட தாமதமும் காயமடைந்தோர் அநியாயமாக உயிரிழக்க காரணமாகி விட்டன. <br />
<br />
<strong>மருத்துவமனை மீது தாக்குதல்</strong> <br />
<br />
இதேவேளை, தேவிபுரத்தில் இயங்கி வரும் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது நேற்று அதிகாலை 1:00 முதல் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். <br />
<br />
இதில் பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதனால் மருத்துவமனையில் இருக்கும் நோயாளர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.</div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-60443211902478706072011-04-30T18:52:00.002+05:302011-04-30T18:52:24.707+05:3012 பெப்ரவரி 2009 பயங்கரவாத சிறிலங்கா அரசின் இனப்படுகொலையின் ஆதாரங்கள் - [எச்சரிக்கை: இதய பலவீனமானவர்களும் குழந்தைகளும் இதை தவிர்க்கவும்]<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">பயங்கரவாத சிறிலங்கா அரசின் இனப்படுகொலையின் ஆதாரங்கள் - [எச்சரிக்கை: இதய பலவீனமானவர்களும் குழந்தைகளும் இதை தவிர்க்கவும்]</div><div class="heading"> </div><div class="date">[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/eelam/people/rp_31_01_2009_034.jpg" /></div>கடந்த 31ஆம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள்.</div><div align="left">ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் , தஞ்சை வெண்மணியில் நிகழ்ந்ததை விட கொடூரமான இனப்படுகொலைகளை பயங்கரவாத சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இந்தப் பதிவுகளே ஆதாரங்கள்.</div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/rp_31_01_2009_002.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/rp_31_01_2009_004.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/rp_31_01_2009_005.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/rp_31_01_2009_007.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/rp_31_01_2009_008.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/rp_31_01_2009_012.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/rp_31_01_2009_016.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/rp_31_01_2009_021.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/rp_31_01_2009_025.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/rp_31_01_2009_028.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/rp_31_01_2009_031.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/rp_31_01_2009_032.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/rp_31_01_2009_034.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/rp_31_01_2009_036.jpg" /></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-85384048837417685542011-04-30T18:50:00.002+05:302011-04-30T18:50:50.109+05:3013 பெப்ரவரி 2009 நேற்று(வியாழன்) மட்டும் 6 ஆயிரம் பீரங்கிக் குண்டுகளை "பாதுகாப்பு வலயம்" மீது வீசியது சிறிலங்கா: 132 தமிழர்கள் பலி: 358 பேர் காயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">நேற்று(வியாழன்) மட்டும் 6 ஆயிரம் பீரங்கிக் குண்டுகளை "பாதுகாப்பு வலயம்" மீது வீசியது சிறிலங்கா: 132 தமிழர்கள் பலி: 358 பேர் காயம்</div><div class="heading"> </div><div class="date">[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/eelam/people/vanni_20090213001.jpg" /></div>வன்னியில் உள்ள தேவிபுரம் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கித் தாக்குதலில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 358 பேர் காயமடைந்துள்ளனர். </div><div class="remainder">முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது நேற்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் செறிவான எறிகணைத் தாக்குதலை சிறிலங்கா படையினர் நடத்தியுள்ளனர். <br />
நேற்று முழு நாளும் அதிகாலை தொடக்கம் மாலை வரை 6 ஆயிரம் எறிகணைகள் வரை இந்தப் பகுதியில் வீழ்ந்து வெடித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. <br />
இதில் 132 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 358 பேர் காயமடைந்துள்ளனர். <br />
காயமடைந்தவர்களில் 91 பேர் மாத்தளன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், இவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களில் 10 பேர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகையிலேயே உயிரிழந்து விட்டனர். <br />
காயமடைந்த ஏனையவர்களின் நிலைமையும் ஆபத்தான கட்டத்திலேயே உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.<br />
<div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090213001.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090213002.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090213003.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090213004.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090213005.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090213006.jpg" /></div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-40994068296544955122011-04-30T18:49:00.005+05:302011-04-30T18:49:48.367+05:3013 பெப்ரவரி 2009 வன்னியில் தினமும் சராசரி 40 பொதுமக்கள் பலியாவதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர்: வைத்தியர் வரதராசா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">வன்னியில் தினமும் சராசரி 40 பொதுமக்கள் பலியாவதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர்: வைத்தியர் வரதராசா</div><div class="heading"> </div><div class="date">[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/eelam/people/vanni_2009_02_13_1.jpg" /></div>வன்னிப் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் கடும் மோதல்களினால் தினமும் சராசரியாக 40 பொதுமக்கள் பலியாவதுடன், 100க்கும் அதிகமானவர்கள் கயாங்களுக்கு உள்ளாவதாக பிரதேசத்தின் உயர் மருத்துவ அதிகாரி மருத்துவர் வரதராசா தெரிவித்துள்ளார்.<br />
</div>மோதல்கள் இடம்பெற்று வரும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களினாலேயே பொதுமக்கள் காயமடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.<br />
<br />
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இன்னமும் அதிகமான பொதுமக்கள் சிக்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.<br />
<br />
பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மோதல்கள் இடம்பெற்று வருவதாக அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் வலியுறுத்தி வருகின்ற போதிலும், தினந்தோறும் பொதுமக்கள் பாதிக்கும் வீதம் உயர்வடைந்து செல்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது.<br />
<br />
நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு போதியளவு மருத்துவ அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவதாகக் குறிப்பிடப்படுகிறது.<br />
<br />
மேலும் மருந்துப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் வைத்தியர் வரதராசா குறிப்பிட்டுள்ளார்.</div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-7023587923947647882011-04-30T18:49:00.002+05:302011-04-30T18:49:14.248+05:3013 பெப்ரவரி 2009 புதிய "பாதுகாப்பு வலயம்" மீது சிறிலங்கா பீரங்கி தாக்குதல் 27 தமிழர்கள் படுகொலை; 116 பேர் படுகாயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">புதிய "பாதுகாப்பு வலயம்" மீது சிறிலங்கா பீரங்கி தாக்குதல் 27 தமிழர்கள் படுகொலை; 116 பேர் படுகாயம்</div><div class="heading"> </div><div class="date">[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/eelam/people/puthu_13_02_2009_008_thumb.JPG" /></div>தானே அறிவித்த புதிய "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீதும் மற்றும் பிற பகுதிகள் மீதும் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 27 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 116 பேர் காயமடைந்துள்ளனர்.</div><div class="remainder">சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்த புதிய "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகள் மீது இன்று சிறிலங்கா படையினர் செறிவான எறிகணை தாக்குதலை நடத்தியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளை நோக்கி இன்று வெள்ளிக்கிழமைமாலை தொடக்கம் 60-க்கும் அதிகமான ஆட்லெறி எறிகணைகளை செறிவாக வீசி தாக்குதலை நடத்தினர்.<br />
இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 45 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பாலையில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்கள் மீது இன்று சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.<br />
பிரதான வீதியில் இன்று இரவு 7:50 மணியளவில் நடத்தப்பட்ட இந்த எறிகணைத் தாக்குதலில் 14 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 34 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொதுமக்கள் மீது இன்றுகாலை 10:00 மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான ஆட்லெறி எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.<br />
இதில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 34 பேர் காயமடைந்துள்ளனர். க.பார்த்தீபன் (வயது 15)<br />
கண்ணன் (வயது 18)<br />
தர்மராஜா (வயது 51)<br />
சி.சதீஸ் (வயது 34)<br />
அ.கிறிஸ்டி குமுதா<br />
<br />
ஆகியோர் கொல்லப்பட்டனர்.<br />
புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று இரவு 8:00 மணியளவில் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்து சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர்.<br />
வீதியில் சென்று கொண்டிருந்த சுமையூர்தி மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் அதில் சென்று கொண்டிருந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர் சிவகுமார் சசிக்குமார் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.<br />
<div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/puthu_13_02_2009_001.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/puthu_13_02_2009_002.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/puthu_13_02_2009_003.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/puthu_13_02_2009_004.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/puthu_13_02_2009_005.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/puthu_13_02_2009_006.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/puthu_13_02_2009_007.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/puthu_13_02_2009_008.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/puthu_13_02_2009_009.jpg" /></div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-49196543875462488762011-04-30T18:46:00.002+05:302011-04-30T18:46:49.908+05:3014 பெப்ரவரி 2009 வயோதிபர் இல்லத்தை தாக்கியது சிறிலங்கா: இன்று (சனி) 79 தமிழர்கள் படுகொலை; 172 பேர் படுகாயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">வயோதிபர் இல்லத்தை தாக்கியது சிறிலங்கா: இன்று (சனி) 79 தமிழர்கள் படுகொலை; 172 பேர் படுகாயம்</div><div class="heading"> </div><div class="date">[ சனிக்கிழமை, 14 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/eelam/people/142091.jpg" /></div>சிறிலங்கா படையினர் இன்று சனிக்கிழமை வன்னி மீது நிகழ்த்திய வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் நான்கு மூதாதையர்கள் உட்பட 79 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 172 பேர் படுகாயமடைந்துள்ளனர்.</div><div class="remainder"><div align="left"><strong>மூதாளர் பேணலகம்</strong> <br />
<br />
"அன்புச்சோலை மூதாளர் பேணலகத்தின் மீது இன்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலில் அங்கு பராமரிக்கப்பட்டு வந்த 4 முதியவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். <br />
வள்ளி ஆச்சி (வயது 99) <br />
கறுப்பையா (வயது 101) <br />
பொன்னம்மா (வயது 80) <br />
இளையபிள்ளை (வயது 86) <br />
ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். <br />
வேலாச்சி (வயது 97) <br />
செல்லையா (வயது 98) <br />
பழனி (வயது 79) <br />
கிருஸ்ணன் (வயது 80) <br />
இராஜேஸ்வரி (வயது 67) <br />
பராமரிப்பாளரான கருணாகரன் (வயது 35) <br />
ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். <br />
<br />
புதுமாத்தளன் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிக்குள் இருந்த அன்புச்சோலை மூதாளர் பேணலகம் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.</div><div align="left"><strong>பொதுமக்கள் மீது வேவு பார்த்து தாக்குதல் <br />
</strong>முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மற்றும் சுற்றயல் பகுதிகளில் இன்று சிறிலங்கா வான் படையினர் பொதுமக்களை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். <br />
இதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். <br />
<br />
அத்துடன், தேவிபுரம், வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் மீது இன்று சனிக்கிழமை சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதல்களை நடத்தினர். <br />
இதில் 36 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 98 பேர் படுகாயங்களுக்கும், எரிகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளனர். <br />
<br />
இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை நோட்டம் பார்த்து சிறிலங்கா வான்படை வேவு வானூர்தி அடையாளம் காட்டிய போதே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. </div><div align="left"><strong>முள்ளிவாய்க்கால்</strong> </div><div align="left">"மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதியில் இன்று காலை 10:00 மணியளவில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது. <br />
இதில் 3 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 5 பேர் காயமடைந்துள்ளனர்.</div><div align="left"><strong>புதுமாத்தளன்</strong></div><div align="left">முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுமாத்தளன் நோக்கி இன்றிரவு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்தும் வாழ்விடங்களை இலக்கும் வைத்தும் சிறிலங்கா படையினர் செறிவான ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.</div><div align="left">இதன் போது, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த புதிய பாதுகாப்பு வலய பகுதியான புதுமாத்தளன் மக்கள் வாழ்விடம் நோக்கி நூற்றுக்கும் அதிகமான எறிகணைகளை வீழ்ந்து வெடித்துள்ளன.</div><div align="left">இதில் 12 சிறுவர்கள் உட்பட 18 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர்.</div><div align="left"><strong>இரவில் புதுக்குடியிருப்பு மீது தாக்குதல்</strong></div><div align="left">புதுக்குடியிருப்பில் இன்றிரவு இரவு 9:50 நிமிடம் தொடக்கம் 10:15 நிமிடம் வரை சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.</div><div align="left">இதில் 6 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 27 பேர் காயமடைந்துள்ளனர்.</div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/142091.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/142092.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/142093.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/142094.jpg" /></div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-10318575973139103402011-04-30T18:44:00.002+05:302011-04-30T18:44:34.146+05:3015 பெப்ரவரி 2009 மரண வலயமான புதிய "பாதுகாப்பு வலயம்": வன்னியில் நேற்றும் இன்றும் 134 தமிழர்கள் படுகொலை; 208 பேர் காயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">மரண வலயமான புதிய "பாதுகாப்பு வலயம்": வன்னியில் நேற்றும் இன்றும் 134 தமிழர்கள் படுகொலை; 208 பேர் காயம்</div><div class="heading"> </div><div class="date">[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/eelam/people/mullai_15_02_2009_008.jpg" /></div>முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான முள்ளிவாய்க்கால், அம்பலவன்பொக்கணை, புதுக்குடியிருப்பு , புதுமாத்தளன், ஆகிய பகுதிகளிலும் மற்றும் கோம்பாவில் பகுதியிலும் சிறிலங்கா படையினர் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் 134 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 208 பேர் காயமடைந்துள்ளனர்.</div><div class="remainder"><strong>கோம்பாவில்<br />
</strong>கோம்பாவில் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு 10:15 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் கொத்துக் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். <br />
<br />
இவர்களில் மகேந்திரன் மற்றும் பத்மநாதன் ஆகியோரின் குடும்பங்கள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.<br />
<br />
மகேந்திரன் சுபாஜினி (வயது 14)<br />
<br />
மகேந்திரன் சஞ்சீவன் (வயது 20)<br />
<br />
செல்லையா மகேந்திரன் (வயது 80)<br />
<br />
மகேந்திரன் சுலோசனாதேவி (வயது 51)<br />
<br />
மகேந்திரன் சோபிதா (வயது 26)<br />
<br />
மகேந்திரன் தயாளினி (வயது 25)<br />
<br />
செல்லையா இராசம்மா (வயது 69)<br />
<br />
வி.பத்மநாதன் (வயது 38)<br />
<br />
பத்மநாதன் தமிழனி (வயது 01<br />
<br />
பத்மநாதன் ரேணுசா (வயது 03)<br />
<br />
பத்மநாதன் கோகிலராணி (வயது 06)<br />
<br />
பத்மநாதன் சோதிஜா (வயது 09)<br />
<br />
பத்மநாதன் கேதீஸ்வரி (வயது 31)<br />
<br />
ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.<br />
<br />
முள்ளிவாய்க்கால்<br />
<br />
முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 4 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.<br />
<br />
இவர்களின் உடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.<br />
<strong>புதுமாத்தளன் - சனிக்கிழமை இரவு</strong><br />
சிறிலங்கா படையினரின் "பாதுகாப்பு வலயம்" என்ற அறிவிப்பை அடுத்து புதுமாத்தளன் பகுதியில் மக்கள் மிகச் செறிவாக அடைக்கலம் புகுந்துள்ள நிலையில் அவர்களை கொன்றொழிக்கும் நோக்குடன் தாக்குதகள் சிறிலங்கா படையினரால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.<br />
<br />
புதுமாத்தளன் நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களை இலக்கு வைத்தும் அப்பகுதி மக்கள் வாழ்விடங்களை இலக்கும் வைத்தும் சிறிலங்கா படையினர் செறிவான ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.<br />
<br />
இதில் 12 சிறுவர்கள் உட்பட 78 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 132 பேர் காயமடைந்துள்ளனர்.<br />
<strong>புதுமாத்தளன் - ஞாயிற்றுக்கிழமை காலை</strong><br />
புதுமாத்தளன் "மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர்.<br />
<br />
<strong>புதுமாத்தளன் - ஞாயிற்றுக்கிழமை மாலை</strong><br />
இதே பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழைமை பிற்பகல் 3:00 மணியளவில் பொதுமக்களை நோக்கி சிறிலங்கா படையினர் ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 12 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 38 பேர் காயமடைந்துள்ளனர்.<br />
<br />
கொல்லப்பட்டவர்களில் -<br />
<br />
யோ.ஜெகதீபன் (வயது 16)<br />
<br />
செல்வராசா செல்வகுமார் (வயது 32)<br />
<br />
சி.திருச்செல்வம் (வயது 33)<br />
<br />
சு.குகாஜினி (வயது 35)<br />
<br />
பு.இராசம்மா (வயது 55)<br />
<br />
சோ.யோகானந்தராசா (வயது 47)<br />
<br />
வ.நிசாந்தன் (வயது 26)<br />
<br />
சி.காமினிதேவி (வயது 63)<br />
<br />
சி.நாகவதனி<br />
<br />
ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.<br />
<br />
மேலும் - இரண்டு ஆண்கள் மற்றும் பெண் ஒருவரின உடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.<br />
<strong>முள்ளிவாய்க்கால்</strong><br />
முள்ளிவாய்க்கால் மக்கள் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியில் உள்ள மக்கள் வாழ்விடம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.<br />
<br />
<strong>அம்பலவன்பொக்கணை</strong><br />
அம்பலவன்பொக்கணை "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதி மீது இன்று ஞாயிறு இரவு 7:35 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியதில் ஒரு சிறுவன் உட்பட 5 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளனர்.<br />
<br />
<strong>புதுக்குடியிருப்பு</strong><br />
புதுக்குடியிருப்பு பகுதியில் பொதுமக்களை இலக்கு வைத்து நேற்று சனிக்கிழமை இரவு 10:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத்தாக்குதலில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.<br />
<br />
இவர்களில் 5 சிறுவர்களும் 4 பெண்களும் அடங்குவர்.<br />
<br />
பூநகரியைச் சேர்ந்த இவர்களின் 3 குடும்பத்தினரும் ஒன்றாக இடம்பெயர்ந்து பல இடங்களில் தங்கியிருந்து, கடைசியாக புதுக்குடியிருப்புக்கு வந்து தற்காலிக கொட்டகை கட்டி தரித்திருந்த வேளையில் சிறிலங்கா படையினர் இவர்கள் மீது கொத்துக்குண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.<br />
<br />
இதில் சம்பவ இடத்திலேயே 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.<br />
<br />
உடலங்கள் அந்த இடத்திலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் அவர்கள் தற்காப்புக்காக வெட்டியிருந்த திறந்த காப்பகழிகளில் அடக்கம் செய்யப்பட்டன.<br />
<div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/mullai_15_02_2009_008.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/mullai_15_02_2009_007.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/mullai_15_02_2009_001.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/mullai_15_02_2009_003.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/mullai_15_02_2009_004.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/mullai_15_02_2009_005.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/mullai_15_02_2009_002.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/mullai_15_02_2009_006.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/mullai_15_02_2009_009.jpg" /></div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-70502762296626338622011-04-30T18:41:00.000+05:302011-04-30T18:41:11.857+05:3016 பெப்ரவரி 2009 திருமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் வன்னி நோயாளர்களின் பெயர் விபரங்கள்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="news"> <div class="heading">திருமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் வன்னி நோயாளர்களின் பெயர் விபரங்கள்</div><div class="heading"> </div><div class="date">[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/others/hospital002.jpg" /></div>சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் நடைபெறும் யுத்தத்தினால் பாதிப்படையும் தமிழ்மக்களுள் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் மக்களின் பெயர் விபரக்கொத்து.</div><div class="remainder"><ol><li>சிவலிங்கம் (75) கட்டைக்காடு பெரியகுளம் முல்லைத்தீவு </li>
<li>டொமினிக் (24) யாழ்ப்பாணம் </li>
<li>பி. குகராணி (42) பெரியமடு </li>
<li>ஜெயரூபன் (12) வல்லிபுரம் </li>
<li>எஸ். நல்லம்மா (71) பெரியமடு </li>
<li>அருள்ராஜ் (11) பெரியமடு தேவிபுரம் </li>
<li>கஜீபன் (08) பெரியமடு தேவிபுரம் </li>
<li>ஜேம்ஸ் ரண்டராஜா (43) வன்னிக்குளம் கிளிநொச்சி </li>
<li>எஸ். மங்கையற்கரசி (47) </li>
<li>மேகராஜா (64) வன்னிக்குளம் கிளிநொச்சி </li>
<li>எஸ், வரதராசன் (23) இயக்கச்சி </li>
<li>பி. ஜெயந்தி(46) தர்மபுரம் கிளிநொச்சி </li>
<li>புவனேஸ்வராஜ் (39) மன்னார் </li>
<li>தங்கவேல் (73) </li>
<li>ரி. ராமுஜி (68) உடையார்கட்டு முல்லைத்தீவு </li>
<li>பிரியதர்சினி (30) வவுனியா </li>
<li>இராசமலர் (05) வட்டக்கச்சி </li>
<li>துஸ்யந்தினி (02) விஸ்வமடு முல்லைத்தீவு </li>
<li>சந்திரகுமார் (21) மன்னார் </li>
<li>துஸ்யந்தி (21) மன்னார் </li>
<li>கே. மகேந்திரன் (42) வற்றாப்பளை </li>
<li>ரி. கிருஸ்ணா (19) இரணைப்பாலை புதுக்குடியிருப்பு </li>
<li>எம். ராசமலர் (48) வற்றாப்பளை </li>
<li>எம். மஞ்சுதன் (07) வற்றாப்பளை </li>
<li>மேரி (80) முல்லைத்தீவு </li>
<li>வை. லோகராசா (34) புதுக்குடியிருப்பு </li>
<li>எஸ். சுப்பிரமணியம் (59) நெடுங்கேணி முல்லைத்தீவு </li>
<li>எல். லோஜிதா (1 1/2) தொண்டமனாறு கிளிநொச்சி) </li>
<li>எல். சிவாஜினி (24) தொண்டமனாறு கிளிநொச்சி </li>
<li>எல். நிலோசா (06) தொண்டமனாறு கிளிநொச்சி </li>
<li>எஸ். ஜேசுதாசன் (63) வசாவிளான்) </li>
<li>பூமணி (61) புதுக்குடியிருப்பு </li>
<li>கங்காராணி (25) முல்லைத்தீவு </li>
<li>தனபாலன் (36) முல்லைத்தீவு </li>
<li>கே. அஜந்தா (30) முல்லைத்தீவு </li>
<li>தனுஸா (09 நாட்கள்) </li>
<li>எஸ். விஜிதா (23) புதுக்குடியிருப்பு </li>
<li>அருந்தவாசி (49)புதுக்குடியிருப்பு </li>
<li>சுதர்சினி (20) வட்டக்கச்சி </li>
<li>ஜெயரூபி (04) நாட்கள் புதுக்குடியிருப்பு </li>
<li>தேவபாலன் (36) முல்லைத்தீவு </li>
<li>என். நிரோஜா (05) கோணாவில் கிளிநொச்சி </li>
<li>ரீரா மேரி (30) கோணாவில் கிளிநொச்சி </li>
<li>கே. கனுஸா (09) புதுமுறிப்பு கிளிநொச்சி </li>
<li>ஸர்சன் (04) குமுளமுனை முல்லைத்தீவு </li>
<li>ஸஜன்தி (06) குமுளமுனை முல்லைத்தீவு </li>
<li>பத்மான்ஜனி (36) குமுளமுனை முல்லைத்தீவு </li>
<li>ஜெயந்தி (38) புதுமுறிப்பு கிளிநொச்சி </li>
<li>எஸ். மேரி மார்கிறெற் (35) யாழ்ப்பாணம் </li>
<li>துவாரகா (03) யாழ்ப்பாணம் </li>
<li>தூரணி (05) யாழ்ப்பாணம் </li>
<li>எ. நவரட்ணம் (81) கொடிகாமம் </li>
<li>கே. மகேஸ்வரன் (51) ஜெயந்திநகர் முல்லைத்தீவு </li>
<li>வ.விஜிதா (52) இரணைப்பாலை புதுக்குடியிருப்பு </li>
<li>வை. ரஞ்சிதா (09) கண்டாவளை </li>
<li>மேரி மஞ்சுளா (26) விஸ்வமடு முல்லைத்தீவு </li>
<li>கிம்சிகாந் (09) வட்டக்கச்சி </li>
<li>மேரி அர்ஸினி (60) முல்லைத்தீவு </li>
<li>எஸ். நிமலன் (10) மல்லாவி </li>
<li>ஜெயசுதன் (43) வட்டக்கச்சி </li>
<li>சி. சுகந்தி (37) யாழ்ப்பாணம் </li>
<li>நிரோயன் (13) மல்லாவி </li>
<li>சிவாந்தி (08) மல்லாவி </li>
<li>மாப்பனார் மாணிக்கம் (37) புதுக்குடியிருப்பு </li>
<li>ரி. இந்திடா ரஞ்சனி (16) புதுக்குடியிருப்பு </li>
<li>பூசையாமணி (64) தர்மபுரம் கிளிநொச்சி </li>
<li>யூலியற் (29) </li>
<li>தாஞ்சயினி ஜெயந்தி (11) மல்லாவி </li>
<li>கே. ஜெகதீஸ்வரன் (49) வவுனிக்குளம் </li>
<li>தர்மிகன் (11) வவுனிக்குளம் </li>
<li>திருமதி எல். கஜேந்திரன் (68) கிளிநொச்சி </li>
<li>குசிதா (08) ஓட்டறுத்தகுளம் </li>
<li>மஞ்சுளா (43) ஓட்டறுத்தகுளம் </li>
<li>ரி.அபிரஞ்சன் (06) பூம்புகார் கிளிநொச்சி </li>
<li>தமிழினியாள் மதுரஞ்சன் (06) பூம்புகார் கிளிநொச்சி </li>
<li>விநோஜினி (16) உருத்திரபுரம் கிளிநொச்சி </li>
<li>தமிழினி (10) பூம்புகார் கிளிநொச்சி </li>
<li>சற்குணம் அருமைதாஸ் (25) மல்லாவி </li>
<li>மனோகரன் (10) கிளிநொச்சி </li>
<li>லோரி (67) உருத்திரபுரம் கிளிநொச்சி </li>
<li>அமிர்தராஜ் (55) புளியங்குளம் </li>
<li>ரி. சுபத்திராதேவி (75) கிளிநொச்சி </li>
<li>கலைநிலா (02) </li>
<li>கலைவிழி (07) </li>
<li>கமலேந்திரன் (33) யாழ்ப்பாணம் </li>
<li>தாஞ்சாயினி (10) வட்டக்கச்சி </li>
<li>பத்மராணி (35) பாரதிபுரம் கிளிநொச்சி </li>
<li>சேபமலர் அன்ரனிபிள்ளை (31) தலைமன்னார் </li>
<li>எஸ். பூமலர் (60) மிருசுவில் யாழ்ப்பாணம் </li>
<li>ரி.அன்ரனிப்பிள்ளை (45) வட்டக்கச்சி </li>
<li>திலகேஸ்வரி (2) அரசிக்குளம் </li>
<li>பானுஸா (09) </li>
<li>ரி. புஸ்பவதி (68) மல்லாவி </li>
<li>ஆர். உமையாள் (09 நாட்கள்) கிளிநொச்சி </li>
<li>தடகாயிபிராட்டி (49) கிளிநொச்சி </li>
<li>எட்வாட் சுகந்தினி (26) ஆனையிறவு </li>
<li>ரி.துளசி (04) கிளிநொச்சி </li>
<li>வி.சரஸ்வதி (07) புதுக்குடியிருப்பு </li>
<li>ராஜேஸ்வரி (40) புளியங்குளம் </li>
<li>ஜோசப் பெர்னாண்டோ சேபன் (50)முல்லைத்தீவு </li>
<li>லைப்பன் (08) ஞானபாலையம் </li>
<li>சி.பரமேஸ்வரி (07) கிளிநொச்சி </li>
<li>பிரகாஸ் (10) </li>
<li>பிரமிகாஸ் (02) </li>
<li>பிரதேஸ் (09) </li>
<li>வி.ஞானகுமாரி (47) கோப்பாய் புதுக்குடியிருப்பு </li>
<li>எஸ். சிந்துஜா (18) கிளிநொச்சி </li>
<li>ஜி. யோகேஸ்வரன் (17) </li>
<li>மகாலக்ஸ்மி (58) கணேசபுரம் கிளிநொச்சி </li>
<li>சுபாஜினி (27) ஸ்கந்தபுரம் கிளிநொச்சி </li>
<li>பேபி ஒவ் சுபாஜினி ஸ்கந்தபுரம் கிளிநொச்சி </li>
<li>எஸ். சசிதரவாணி (37) கிளிநொச்சி </li>
<li>கார்த்திக் (09) </li>
<li>தவமணி (62) முள்ளியவளை </li>
<li>சிவப்பிரகாஸம் (77) முள்ளியவளை </li>
<li>பகிரதன் (09) கிளிநொச்சி </li>
<li>எ.அம்பலம் (60) கிளிநொச்சி </li>
<li>ஆர்.சரோயா (51) சுதந்திரபுரம் </li>
<li>எஸ்.சசிகரன் (31) முரசுமோட்டை </li>
<li>எஸ்.சிவமணி (27) முரசுமோட்டை </li>
<li>எஸ்.பானுயா (02) முரசுமோட்டை </li>
<li>எஸ். நாகேஸ்வரி (53) விஸ்வமடு முல்லைத்தீவு </li>
<li>ஜி.சிந்துயன் (12) பூநகரி </li>
<li>மாரியம்மா (63) யாப்பாணம் </li>
<li>தேவராச (56) திருநகர் கிளிநொச்சி </li>
<li>எஸ். சந்திரகாசன் (28) முள்ளியவளை </li>
<li>ஜெயதரிசினி (22) முள்ளியவளை </li>
<li>சந்திரா (01) முள்ளியவளை </li>
<li>ஜி.சிவகுருநாதன் (63) முல்லைத்தீவு </li>
<li>எஸ்.ரஜிதா (25) யாழ்ப்பாணம் </li>
<li>கலைவாணி (23) வட்டக்கச்சி </li>
<li>கனகேஸ்வரி (677) வட்டக்கச்சி </li>
<li>எம்.ராஜேஸ்வரி (46) பெரியபளை </li>
<li>எஸ்.ரஜினி (32) பெரியகுளம் </li>
<li>மலைச்செல்வி (02) உதயபுரம் கிளிநொச்சி </li>
<li>மேரி அஞ்சலி (71) உதயபுரம் கிளிநொச்சி </li>
<li>ரத்னபூபதி (59) தர்மபுரம் </li>
<li>எஸ்.நிலம்தன் (1 1/2) </li>
<li>மனோன்மணி (58) கிளிநொச்சி </li>
<li>என்.மலர்வன் (01) ஆலங்கேணி பூநகரி </li>
<li>கே.நிசாந்தன் (23) ஆலங்கேணி பூநகரி </li>
<li>யாஹோப் ராஜேஸ் (36) யாழ்ப்பாணம் </li>
<li>மரியகுனேஸ்வரி (31) யாழ்ப்பாணம் </li>
<li>சுந்தரலிங்கம் (55) </li>
<li>இராமசாமி (68) முல்லைத்தீவு </li>
<li>சத்தியசீலன் (04) முல்லைத்தீவு </li>
<li>அன்னமுத்து (67) முல்லைத்தீவு </li>
<li>நாகேஸ்வரி (06) முல்லைத்தீவு </li>
<li>விவேகன் (36) முல்லைத்தீவு </li>
<li>சி.தேவராஜா (74) கிளிநொச்சி </li>
<li>பி.கோகிலா (01) கிளிநொச்சி </li>
<li>கிருஸ்ணா (25) கிளிநொச்சி </li>
<li>என்.சிந்துஜா (14) கிளிநொச்சி </li>
<li>என்.வளர்மதி (38) பூநகரி </li>
<li>ஆர்.ஜரிணி (03) தர்மபுரம் கிளிநொச்சி </li>
<li>ஆர்.சசிகலா (35) தர்மபுரம் கிளிநொச்ச்சி </li>
<li>ஆரணி (1 1/2) புதுக்குடியிருப்பு </li>
<li>முகந்தினி (25) பூநகரி </li>
<li>அனுலாவதி </li>
<li>தனலக்ஸ்மி (05 நாட்கள்) கிளிநொச்சி </li>
<li>மதுசாலினி (07) கிளிநொச்சி </li>
<li>சரோயாதேவி (43) பூநகரி </li>
<li>தமிழின்பன் (1 1/2) கிளிநொச்சி </li>
<li>கே.பவித்திரா (06) கிளிநொச்சி </li>
<li>கே. அன்ரனி (04) கிளிநொச்சி </li>
<li>கே.தனலக்ஸ்மி (34) கிளிநொச்சி </li>
<li>கணேஸபிள்ளை (07) முல்லைத்தீவு </li>
<li>எஸ். அஞ்சலிகா (57) கிளிநொச்சி </li>
<li>மகிலன் (04) கிளிநொச்சி </li>
<li>அருமைநாதன் (46) விஸ்வமடு முல்லைத்தீவு </li>
<li>ரி.பாலசுப்பிரமணியம் (55) கிளிநொச்சி </li>
<li>என்.மோகனதாஸ் (38) கிளிநொச்சி </li>
<li>நிசாந்த் (27) கிளிநொச்சி </li>
<li>மோகராஜ் (23) இயக்கச்சி </li>
<li>மோகனரஞ்சிதன் (38) இரணைமடு </li>
<li>தெய்வீகராணி (48) இயக்கச்சி </li>
<li>குழந்தைவேல் (38) முல்லைத்தீவு </li>
<li>சர்மினி (57) உதயநகர் </li>
<li>செல்வகுமார் (38) கிளிநொச்சி </li>
<li>ரி.தாமின்பன் (61) முல்லைத்தீவு </li>
<li>செல்வகன் (05) முல்லைத்தீவு </li>
<li>எஸ்.பிரதீபா (27) அளவெட்டி </li>
<li>எ.சுந்தரலிங்கம் (55) வெள்ளாங்குளம் </li>
<li>காசியாம்மா (36) இடுப்பங்கட்டு </li>
<li>சிவகுமார் (05) முல்லைத்தீவு </li>
<li>சுரேஸ்காந் (25) முல்லைத்தீவு </li>
<li>எஸ்.ரஞ்சித் (30) சுதந்திரபுரம் </li>
<li>ஆர்.ஜெகதீஸ்வரி (24) சுதந்திரபுரம் </li>
<li>ஆர்.ஜீவதாஸ் (1 1/2) சுதந்திரபுரம் </li>
<li>எஸ். லீலாவதி (34)உருத்திரபுரம் கிளிநொச்சி </li>
<li>எஸ். சியாளினி (15) உருத்திரபுரம் கிளிநொச்சி </li>
<li>எ.சியாளினி (30) தாண்டிக்குளம் வவுனியா </li>
<li>எ.சிருற்றிகா (04) தாண்டிக்குளம் (வவுனியா) </li>
<li>வி.தர்மலிங்கம் (59) கிளிநொச்சி </li>
<li>பி. சுதர்ஸன் (32) பொக்கணை முல்லைத்தீவு </li>
<li>பாலசரஸ்வதி (35) புதுக்குடியிருப்பு </li>
<li>என்.சரோயாதேவி (50) உடையார்கட்டு முல்லைத்தீவு </li>
<li>செல்லத்துரை கலைவாணன் (42) புதுக்குடியிருப்பு </li>
<li>கே.தர்மேஸ் (07) தண்ணிரூற்று முல்லைத்தீவு </li>
<li>பவதாரிணி (05) </li>
<li>ரியோ சைக்கிளோ (24) பரந்தன் முல்லைத்தீவு </li>
<li>ரியோ லூயிஸ் (67) பரந்தன் முல்லைத்தீவு </li>
<li>கே.பார்ர்த்தசாரதி (25) பலாலி வீதி யாழ்ப்பாணம் </li>
<li>சகோதரி லூயிட்ஸ் (67) பரந்தன் முல்லைத்தீவு </li>
<li>மேரி ரிக்கோயா (34) வலைப்பாடு </li>
<li>அனிரெற்றா (36) வலைப்பாடு </li>
<li>கே.மகாலிங்கம் (60) புதுக்குடியிருப்பு </li>
<li>செல்லம்மா (65) கண்ணகிபுரம் கிளிநொச்சி </li>
<li>ரி.சர்மிளன் (24) கிளிநொச்சி </li>
<li>சரிதா (24) கிளிநொச்சி </li>
<li>ரதுஸன் (1 1/2) கிளிநொச்சி </li>
<li>சித்ராதேவி (34) கிளிநொச்சி </li>
<li>தயாராணி (34) வெற்றிலைக்கேணி </li>
<li>பெளதினி (09) வெற்றிலைக்கேணி </li>
<li>ஜெசிந்தன் ( 1 1/2) வெற்றிலைக்கேணி </li>
<li>ஜெசித்தன் (03) வெற்றிலைக்கேணி </li>
<li>ஜேசுதாஸ் (34) வெற்றிலைக்கேணி </li>
<li>எஸ்.தவக்குமார் (23) பூவரசங்குளம் வவுனியா </li>
<li>கே.குருசாமி (69) பரந்தன் முல்லைத்தீவு </li>
<li>எஸ்.பிரதாப் (05) பரந்தன் முல்லைத்தீவு </li>
<li>என்.மகேந்திரன் (53) </li>
<li>எம்.இந்திராதேவி (46) விஸ்வமடு முல்லைத்தீவு </li>
<li>புஸ்பநீலமணி (58) நெடுங்கேணி (முல்லைத்தீவு) </li>
<li>எஸ்.கந்தையா (60) சுதந்திரபுரம் </li>
<li>எஸ்.தனுஸா - யாழ்ப்பாணம் </li>
<li>வி.சற்குணராஜா (35) யாழ்ப்பாணம் </li>
<li>எஸ்.வன்னியசிங்கம் (50) அக்கராயன்குளம் </li>
<li>என்.நடராஜா (16) புதுக்குடியிருப்பு </li>
<li>எஸ்.கிருஸாந்த் (13) யாழ்ப்பாணம் </li>
<li>என்.ஸ்ரீதர் (44) பல்லாலி </li>
<li>எஸ்.செல்வரத்தினம் (70) யாழ்ப்பாணம் </li>
<li>ஜனகராஜ் (16) இராமநாதபுரம் </li>
<li>எஸ்.மாலதி (27) யாழ்ப்பாணம் </li>
<li>கணிகை (56) விஸ்வமடு </li>
<li>எஸ்.ஜெய்யபாலன் (45) கட்டவேலி </li>
<li>எஸ்.சுகிர்தகுமார் (48) வட்டுக்கோட்டை </li>
<li>அபிதா (08) வட்டுக்கோட்டை </li>
<li>எஸ்.கோசிலா (12) வட்டுக்கோட்டை </li>
<li>எஸ்.அலன் (10) வட்டுக்கோட்டை </li>
<li>எ.குணசீலன் (44) புதுக்குடியிருப்பு </li>
<li>என்.சண்முகநாதன் (60) சுழிபுரம் </li>
<li>பி.பெரியநாயகி (50) கிளிநொச்சி </li>
<li>எஸ்.நடராஜ் (65) புதுக்குடியிருப்பு </li>
<li>ரத்னேஸ்வரி (50) முல்லைத்தீவு </li>
<li>கலையரசி (36) கிளிநொச்சி </li>
<li>மேகநாதன் (65) யாழ்ப்பாணம் </li>
<li>கே.மாணிக்கம் (35) குமுளமுனை </li>
<li>கே.கிருபாதேவி (49) உடையார்கட்டு </li>
<li>ஜே.தனலக்ஸிமி (28) உடையார்கட்டு </li>
<li>எம்.ஜதுகுலன் (29) உடையார்கட்டு </li>
<li>கஜீபன் (03) உடையார்கட்டு </li>
<li>சிவமாரி (31) புதுக்குடியிருப்பு </li>
<li>மாணிக்கம் (52) புதுக்குடியிருப்பு </li>
<li>வி.சிவபாதசுந்தரம் (59) கிளிநொச்சி </li>
<li>எ.ராஜேந்திரன் (63) மன்னார் </li>
<li>எம்.ஜோகேஸ்வரி (20) யாழ்ப்பாணம் </li>
<li>பி.துவாரகா (07) முல்லைத்தீவு </li>
<li>பாலராஜ் (40) முல்லைத்தீவு </li>
<li>எம். சரஸ்வதி (56) யாழ்ப்பாணம் </li>
<li>கிஸோர் (01) யாழ்ப்பாணம் </li>
<li>சண்முகம் (64) தேவிபுரம் </li>
<li>எஸ். சண்முகம் (66) தேவிபுரம் </li>
<li>சுவர்ணா - முள்ளியவளை </li>
<li>சகுந்தலாதேவி (46) முள்ளியவளை </li>
<li>திலக்ஸிகா (01) முள்ளியவளை </li>
<li>செபமாலி மேரி (10) மன்னார் </li>
<li>திருஸிகா (14) புதுக்குடியிருப்பு </li>
<li>ராசகுமாரி (07) தேவிபுரம் </li>
<li>ரி.ஜெயராணி (54) சுதந்திரபுரம் </li>
<li>ரி.ஜெயந்தன் (36) சுதந்திரபுரம் </li>
<li>கே.மகேந்திரன் (53) முல்லைத்தீவு </li>
<li>நித்தியகலா (22) தேனிபுரம் கிளிநொச்சி </li>
<li>எ.மதுரைநாயகம் கிளிநொச்சி </li>
<li>மதுஸன் (35) கிளிநொச்சி </li>
<li>மயூரன் (11) கிளிநொச்சி </li>
<li>என்.மலர்வாணி (01) கிளிநொச்சி </li>
<li>எம். புஸ்பஜெனோபா (31) கிளிநொச்சி </li>
<li>சிவஞானம் (47) கனகராயன்குளம் </li>
<li>தேவேந்திரராசா (31) தேவிபுரம் </li>
<li>கோபிகா (45) தேவிபுரம் </li>
<li>பிரபாகரன் (28) </li>
<li>அசிசத் (05) தேவிபுரம் </li>
<li>றோகினி (13) பூநகரி </li>
<li>தனுஸ் (04) சுதந்திரபுரம் </li>
<li>பி. ஸ்ரீகலா (27) சுதந்திரபுரம் </li>
<li>கிருஸாலினி (02) சுதந்திரபுரம் </li>
<li>எம்.அபர்ணா (05) யாழ்ப்பாணம் </li>
<li>அபிமன்யு (03) யாழ்ப்பாணம் </li>
<li>எம். ஜமுனா (36) யாழ்ப்பாணம் </li>
<li>கந்தசாமி (54) சுள்ளிபுரம் </li>
<li>பி.தட்சணாமூர்த்தி (63) கோண்டாவில் கிழக்கு </li>
<li>எஸ்.தினகரன் (54) ஆனந்தபுரம் </li>
<li>கே.தர்ஸன் (15) முழங்காவில் </li>
<li>பி.லிந்துஜா (09) மல்லாவி </li>
<li>பிரேமநாதா (41) மல்லாவி </li>
<li>விதுரகன் (11) மல்லாவி </li>
<li>பி.கிருஜா (35) மல்லாவி </li>
<li>திவ்யன் (04) மல்லாவி </li>
<li>லக்ஸனா (10) பூநகரி </li>
<li>பி.தனுஜன் (06) மல்லாவி </li>
<li>நாகேந்திரன் (39) முல்லைத்தீவு </li>
<li>எஸ்.கோவிந்தபிள்ளை (57) புதுக்குடியிருப்பு </li>
<li>பி.ராமர் (51) கிளிநொச்சி </li>
<li>எஸ்.ஜதுர்ஸி (16) முள்ளியவளை </li>
<li>கோபாலகிருஸ்ணன் (35) காரைநகர் </li>
<li>சிவதாஸ் (24) </li>
<li>கே.புஸ்பமலர் (52) குமுளமுனை </li>
<li>ராஜேஸ்வரி (31) பூநகரி </li>
<li>ஆர்.எழிலரசி (36) முல்லைத்தீவு </li>
<li>எம்.சிவம்மா (40) புதுக்குடியிருப்பு </li>
<li>கே.முருகேஸ் ( 80) மன்னார் </li>
<li>என். நாகேஸ்வரி (55) புதுக்குடியிருப்பு </li>
<li>கே.சிவபாலன் (37) பூநகரி </li>
<li>கிருஸாந்தன் (17) கிளிநொச்சி </li>
<li>எம்.யசோதினி (35) புதுக்குடியிருப்பு </li>
<li>எம்.பவிர்ஸன் (04) புதுக்குடியிருப்பு </li>
<li>எம்.விதுர்ஸன் (07) புதுக்குடியிருப்பு </li>
<li>மகேஸ்வரி (46) கிளிநொச்சி </li>
<li>எஸ். மனோகரன் (46) பூநகரி </li>
<li>டிலக்ஸா (02) சோலைமரவடி </li>
<li>அஜந்தினி (22) சோலைமரவடி </li>
<li>கணேசலிங்கம் (32) பூநகரி </li>
<li>எஸ்.கேமமாலினி (32) கிளிநொச்சி </li>
<li>எஸ்.திலகராணி (01) கிளிநொச்சி </li>
<li>செல்வராஜ் (50) முல்லைத்தீவு </li>
<li>சண்முகநாதன் (70) விஸ்வமடு </li>
<li>வைத்தி ஜோசப் (75) பாசிப் பொட்டல் </li>
<li>எஸ்.ரவிராஜ் (17) மட்டக்களப்பு </li>
<li>பி.இருதயசீலி - வெள்ளவேலி </li>
<li>பிரபாமேரி ஜெனிற்றா (18) வெள்ளவேலி </li>
<li>எஸ்.தவமலர் (59) புத்தூர் கிழக்கு </li>
<li>எஸ்.ஸ்ரீஜா (31) அள்ளிக்குளம் வவுனியா </li>
<li>சுதர்ஸன் (33) முரசுமோட்டை </li>
<li>றோசலின் (48) மாதகல் யாழ்ப்பாணம் </li>
<li>சிதம்பரநாதன் (60) முரசுமோட்டை </li>
<li>வி.ரஜினிதேவி (45) முள்ளியவளை </li>
<li>அன்ரனிதேவதாஸ் (40) </li>
<li>மனோன்மணி (68) மல்லாவி </li>
<li>ரி.திலீபன் (34) மல்லாவி </li>
<li>என்.ராஜரத்னம் (60) குமரபுரி </li>
<li>பி.தியாகலிங்கம் (69) காரைநகர் </li>
<li>நல்லம்மா (71) அரியாலூர் </li>
<li>வி.கோமதி (30) முல்லைத்தீவு </li>
<li>சிவசாமி (69) இரணியன்குளம் வவுனியா </li>
<li>ரி.சர்மிளா (06) பாரதிபுரம் </li>
<li>ரி.மேனகா (28) பருத்தித்துறை </li>
<li>எஸ்.செல்வரஞ்சி (63) கிளிநொச்சி </li>
<li>ஆர். ஸ்ரீகரன் (37) வவுனியா </li>
<li>எஸ்.தமிழரசி (37) புதுக்குடியிருப்பு </li>
<li>த்ரிஸிகன் (07) புதுக்குடியிருப்பு </li>
<li>எஸ்.சபாரத்தினம் (57) புதுக்குடியிருப்பு </li>
<li>எஸ்.குலதீபன் (23) முல்லைத்தீவு </li>
<li>குலசூரியன் (66) புதுக்குடியிருப்பு </li>
<li>யு.கமலாதேவி (43) வற்றாப்பளை</li>
</ol></div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-35520480525287053882011-04-30T18:39:00.002+05:302011-04-30T18:39:36.184+05:3016 பெப்ரவரி 2009 பாதுகாப்பு வலய பகுதிகள் மீது படையினர் கொத்துக்குண்டு எறிகணை தாக்குதல்: 53 தமிழர்கள் படுகொலை; 158 பேர் காயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">பாதுகாப்பு வலய பகுதிகள் மீது படையினர் கொத்துக்குண்டு எறிகணை தாக்குதல்: 53 தமிழர்கள் படுகொலை; 158 பேர் காயம்</div><div class="heading"> </div><div class="date">[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/eelam/people/vanni_20090216001.jpg" /></div>முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் மற்றும் தேவிபுரம் ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினர் நேற்று இரவும் இன்றும் நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களில் 53 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 158 பேர் காயமடைந்துள்ளனர். </div><div class="remainder"><strong>புதுக்குடியிருப்பு மற்றும் மாத்தளன்</strong> <br />
புதுக்குடியிருப்பு மற்றும் மாத்தளன் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகள் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தொடக்கம் இன்று காலை வரை சிறிலங்கா படையினர் கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 7 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 34 பேர் படுகாயமடைந்துள்ளனர். <br />
<strong>தேவிபுரம் - ஞாயிற்றுக்கிழமை இரவு </strong><br />
தேவிபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியில் இடம்பெயர்ந்த மக்களை இலக்கு வைத்து நேற்று இரவு சிறிலங்கா படையினர் கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 11 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளனர். <br />
கபிலன் (வயது 07) <br />
முகிலன் (வயது 10) <br />
கீர்த்தனா (வயது 12) <br />
சாரங்கன் (வயது 10) <br />
துசியந்தினி (வயது 37) <br />
ஆறுமுகம் (வயது 88) <br />
சந்திரகலா (வயது 49) <br />
பாலசுப்பிரமணியம் (வயது 67) <br />
தர்மரத்தினம் (வயது 49) <br />
சிவபாக்கியம் (வயது 48) <br />
எழிலரசி (வயது 37) <br />
ஆகியோர் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். <br />
<br />
<strong>தேவிபுரம் - திங்கட்கிழமை காலை</strong> <br />
தேவிபுரம் "மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது இன்று அதிகாலை முதல் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 32 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 89 பேர் காயமடைந்துள்ளனர். <br />
தேவிபுரம் பகுதியில் மக்களுக்கான உணவு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கரைத்துறைப்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் மீது சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் மூன்று பணியாளர்களும் சம்பவ இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர். <br />
பெ.சுப்பிரமணியம் (வயது 40) <br />
சு. சிவகுமார் (வயது 32) <br />
பெ.இராசேந்திரம் (வயது 30) <br />
ஆகிய மூவருமே படுகொலை செய்யப்பட்டவர்களாவர். <br />
இதேவேளை, முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் மருந்துப் பொருட்கள் முடிவடைந்த காரணத்தினால் கடந்த இரண்டு நாட்களில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.<br />
<div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090216001.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090216002.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090216003.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090216004.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090216005.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090216006.jpg" /></div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-14863225469293561132011-04-30T18:37:00.002+05:302011-04-30T18:37:49.996+05:3017 பெப்ரவரி 2009 வன்னியில் இருந்து மேலும் 400 படுகாயமடைந்த மக்களை ஐ.சி.ஆர்.சி. கடல் மார்க்கமாக வெளியேற்றியது.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">வன்னியில் இருந்து மேலும் 400 படுகாயமடைந்த மக்களை ஐ.சி.ஆர்.சி. கடல் மார்க்கமாக வெளியேற்றியது.</div><div class="heading"> </div><div class="date">[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/EGO/17_03.jpg" /></div>முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தலன் பகுதியிலிருந்து சிறிலங்கா படையினரின் ஆட்லறித் தாக்குதலில் படுகாயமடைந்த 400 தமிழ்மக்களை சர்வதேச நெஞ்சிலுவை சங்கம் நேற்று திங்கட்கிழமை கப்பல் மூலம் மேலதிக சிகிச்சைக்காக வெளியேற்றிக் கொண்டு சென்றது</div><div class="remainder">இது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மேலதிக சிகிச்சை அளிப்பதற்காக கடல் மார்க்கமாக கொண்டு செல்லும் படுகாயமடைந்த பொதுமக்களின் மூன்றாவது தொகுதியாகும். <br />
காயமடைந்த இவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் "கிறீன் வோஷன்" கப்பலின் மூலம் திருகோணமலைக்கு வந்தடைந்துள்ளனர். <br />
<br />
இவ்வாறு வந்தவர்கள் அனைவரும் இன்று அதிகாலை 3 மணியளவில் முற்றாக இறக்கப்படடுள்ளனர்; இவ்வாறு வந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.<br />
<br />
முல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசத்தில் செஞ்சிலுவை சங்கம் தற்காலிக மருத்துவ முகாம்களை அமைத்திருக்கும் அதேவேளை, அங்கிருந்து காயமடைந்த மற்றும் நோயாளர்கள் என 750 பொதுமக்கள் கடந்த 10 ஆம் திகதியும் 12 ஆம் திகதியும் வெளியேற்றப்பட்டிருந்தனர். <br />
<br />
இதேவேளை, இந்த நோயாளர்களின் மருத்துவ பணிகளில் சரவதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூன்று வைத்திய நிபுணர்கள் கடமையாற்றுவதாக சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார்.<br />
<br />
இதேவேளை வன்னியில் படுகாயமடைந்த பொதுமக்களுக்கு எதுவித மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ளமுடியாத சூழ்நிலை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.<br />
<div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/17_01.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/17_02.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/17_03.jpg" /></div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-53031494452286245822011-04-30T18:36:00.002+05:302011-04-30T18:36:40.227+05:3017 பெப்ரவரி 2009 சிறிலங்கா கொடுங்கோல் அரசின் தமிழ் இனப் பலி தொடர்கிறது : வன்னியில் இன்றும் (செவ்வாய்) 48 தமிழர்கள் படுகொலை; 126 பேர் காயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">சிறிலங்கா கொடுங்கோல் அரசின் தமிழ் இனப் பலி தொடர்கிறது : வன்னியில் இன்றும் (செவ்வாய்) 48 தமிழர்கள் படுகொலை; 126 பேர் காயம்</div><div class="heading"> </div><div class="date">[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/eelam/people/vanni_0217005.jpg" /></div>வன்னியில் உள்ள மக்கள் பாதுகாப்பு வலய பகுதிகள் மீது இன்று செவ்வாயக்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலில் 48 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 126 பேர் காயமடைந்துள்ளனர். </div><div class="remainder">அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு, தேவிபுரம், மற்றும் வள்ளிபுனம் ஆகிய பகுதிகள் மீது இன்று செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினர் நடத்திய செறிவான கொத்துக்குண்டுத் தாக்குதல்களிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். <br />
புதுக்குடியிருப்பு பகுதியில் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட 3 தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். <br />
பாலகுமார் விதுசா (வயது 14) <br />
தயானந்தன் அம்பிகா (வயது 44) <br />
சசிக்குமர் ஸ்பேயன் (வயது 60) <br />
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். <br />
<br />
புதுக்குடியிருப்பு பகுதியில் பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினர் கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். <br />
இதில் 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர். <br />
விக்கினேஸ்வரன் கஜனி (வயது 07) <br />
சசிக்குமார் தேனிலவன் (வயது 05) <br />
பாலகுமார் விதுசா (வயது 16) <br />
தயானந்தா அம்பிகாவதி (வயது 45) <br />
தவம் பெனடிற் (வயது 61) <br />
சின்னத்தம்பி (வயது 61) <br />
ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். <br />
<br />
ரவீந்திரன் றோஜினி <br />
த.சுபாசினி <br />
தர்மலிங்கம் ஜெனி <br />
தர்மலிங்கம் அஜந்தன் <br />
சு.ஞானாம்பிகா <br />
சோமசுந்தரம் விக்கினேஸ்வரராஜா <br />
விக்கினேஸ்வரராஜா கரன் <br />
அரவிந்தன் <br />
கந்தையா முத்துக்குமார் <br />
க.நந்தினி <br />
சிவச்செல்வன் <br />
த.வனஜா <br />
த.அரவிந்தன் <br />
த.கிநிசா <br />
பாலராசா சந்திரகுமார் <br />
சித்திரவேல் <br />
ஆகியோர் காயமடைந்துள்ளனர். <br />
<br />
தேவிபுரத்தில் 28 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர். <br />
வள்ளிபுனத்தில் 4 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். <br />
அம்பலவன்பொக்கணை மற்றும் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளனர்.<br />
<div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090217001.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090217002.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090217003.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090217004.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090217005.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090217006.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090217007.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090217008.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090217009.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090217010.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090217011.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090217012.jpg" /></div></div></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4270635596602716723.post-86524057946499151512011-04-30T18:35:00.002+05:302011-04-30T18:35:24.415+05:3018 பெப்ரவரி 2009 வன்னியில் இன்று (புதன்) அதிகாலை படையினரின் கொடூர எறிகணை தாக்குதல்: 49 சிறுவர்கள் உட்பட 108 தமிழர்கள் நித்திரையில் பலி ; 223 பேர் காயம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="heading">வன்னியில் இன்று (புதன்) அதிகாலை படையினரின் கொடூர எறிகணை தாக்குதல்: 49 சிறுவர்கள் உட்பட 108 தமிழர்கள் நித்திரையில் பலி ; 223 பேர் காயம்</div><div class="date">[ புதன்கிழமை, 18 பெப்ரவரி 2009</div><div class="brief"><div class="thumb"><img class="ileftb" src="http://tamilwin.com/photos/thumbs/eelam/people/18_02_09_iranaippalai_1.jpg" /></div>வன்னியில் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளில் இன்று புதன்கிழமை அதிகாலை வேளை சிறிலங்கா படையினர் கொடூரமாக நடத்திய கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களில் நல்ல நித்திரையில் இருந்த 49 சிறுவர்கள் அடங்கலாக 108 தமிழர்கள் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 223 பேர் காயமடைந்துள்ளனர். </div><div class="remainder">"மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் இடைக்காடு ஆகிய பகுதிகளில் சிறிலங்கா படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை இருளில் 2:00 மணி தொடக்கம் 5:00 மணிவரை கொடூரமான கொத்துக்குண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். <br />
ஆட்லெறி கொத்துக் குண்டுகள், மோட்டார் எறிகணைகள், பல்குழல் வெடிகணைகள் என 200-க்கும் அதிகமான குண்டுகள் இன்று அதிகாலை மக்கள் மீது வீழ்ந்து வெடித்துள்ளன. <br />
தூக்கத்தில் இருந்த பெருமளவிலான மக்கள் படுகொலை செய்யப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 49 சிறுவர்களும், 21 பெண்களும் அடங்குவர். <br />
அப்பகுதியில் இருந்து மக்களின் பெரும் ஓலங்கள் தொடர்ந்து கேட்ட வண்ணம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. <br />
அதிகாலை வேளை இருளில் நடைபெற்ற தாக்குதல் என்பதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து, அவலப்பட்டு, நாலாபக்கமும் சிதறி ஓடிய வண்ணம் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். <br />
<div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/18_02_09_iranaippalai_1.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/18_02_09_iranaippalai_2.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/18_02_09_iranaippalai_3.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/18_02_09_iranaippalai_4.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/18_02_09_iranaippalai_5.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090218001.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090218002.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090218003.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090218006.jpg" /></div><div align="center"><img alt="" border="0" src="http://tamilwin.com/photos/full/2009/02/vanni_20090218007.jpg" /></div></div></div>Unknownnoreply@blogger.com0