03 பெப்ரவரி 2009 உடையார்கட்டு மருத்துவமனை மீது படையினர் எறிகணை தாக்குதல்: தாதி ஒருவர் பலி; ச.செ.சங்க பணியாளர் உட்பட 10 பேர் காயம்
at சனி, ஏப்ரல் 30, 2011உடையார்கட்டு மருத்துவமனை மீது படையினர் எறிகணை தாக்குதல்: தாதி ஒருவர் பலி; ச.செ.சங்க பணியாளர் உட்பட 10 பேர் காயம்
[ செவ்வாய்க்கிழமை, 03 பெப்ரவரி 2009
உடையார்கட்டு வைத்தியசாலை மீது நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரான தவராசா கஜேந்தினி அந்த இடத்தில் துடிதுடித்து மரணமானார். மற்றும் இருவர் ஆஸ்பத்திரிக்குள் பலியாகினர்.
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ரி.சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் மூன்று ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன. இரண்டாவது ஷெல் வெடித்ததில் தாதிய உத்தியோகத்தர் கொல்லப்பட்டார். அங்கு நோயாளர்களுக்கு அவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோதே அவர் கொல்லப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியான எறிகணை தாக்குதல் காரணமாக காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதிலும் போக்குவரத்திற்கு பெரும் சிரமங்களுக்குள்ளாகியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)
