10 மார்ச் 2009 வன்னியில் நேற்றும் இன்று அதிகாலையும் படையினரின் எறிகணை தாக்குதலில் 25 சிறுவர்கள் உட்பட 74 தமிழர்கள் பலி 100க்கு மேல் காயம்
at வெள்ளி, ஏப்ரல் 29, 2011வன்னியில் நேற்றும் இன்று அதிகாலையும் படையினரின் எறிகணை தாக்குதலில் 25 சிறுவர்கள் உட்பட 74 தமிழர்கள் பலி 100க்கு மேல் காயம்
[ செவ்வாய்க்கிழமை, 10 மார்ச் 2009 ]

திங்கட்கிழமை தாக்குதல்களில் மொத்தமாக 18 சிறுவர்கள் அடங்கலாக 56 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில்
அமபலவன்பொக்கணை பகுதியில் 4 சிறுவர் உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர்.
பச்சைப்புல்மோட்டைப் பகுதியில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர்.
வலைஞர் மடத்தில் 5 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர்.
மாத்தளன் பகுதியில் 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.
இரட்டைவாய்க்கால் பகுதியில் 2 சிறுவர்கள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர்.
முள்ளிவாயக்காலில் ஒரு குழந்தை உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர்.
இதேவேளை இதே பகுதிகளில் இன்று செவ்வாய் அதிகாலை 2.30 மணியளவில் மேற்கொண்ட தாக்குதல்களில் 7 சிறுவர்கள் உட்பட 18 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்
0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)