வன்னியில் இன்றும் 42 தமிழர்கள் படுகொலை; 85 பேர் காயம்
 
[ ஞாயிற்றுக்கிழமை, 01 மார்ச் 2009]
வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 42 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 85 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு, மாத்தளன் பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 37 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 65 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியிலும் இன்று காலை 5:40 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 5 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களினதும் காயமடைந்தவர்களினதும் பெயர் விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online