மக்கள் பாதுகாப்பு வலயம்" பகுதியில் இன்று படையினரின் எரிகுண்டு தாக்குதலில் 26 தமிழர்கள் உடல் கருகி பலி: 52 பேருக்கு எரிகாயம்
 
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2009
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதிகளான மூங்கிலாறு, தேவிபுரம், சுதந்திரபுரம் மற்றும் தேராவில் பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் மட்டும் 26 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்றைய தாக்குதல்களில்  எரிகாயங்களை ஏற்படுத்தும் குண்டுகளை சிறிலங்கா படையினர் பொதுமக்களை நோக்கி பிரயோகித்து இருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இன்றைய தாக்குதல்களில் கொல்லப்பட்ட அனைவரும் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தோர் எல்லோருமே கடுமையான எரிகாயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மூங்கிலாறு
முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதில் 13 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
தேவிபுரம்
 முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடாத்திய தாக்குதலில் 6 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
சுதந்திரபுரம்
முல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய தாக்குதலில் 7 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 பேர் காயமடைந்துள்ளனர்.
தேராவில்
முல்லைத்தீவு தேராவில் பகுதியில் இன்று சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் 4 தமிழர்கள் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா படையினரின் இந்த தாக்குதல்களினால் மக்களின் பெருமளவிலான வீடுகள், வாகனங்கள், வணிக நிறுவனங்கள் என்பன முற்றாக அழிவடைந்தும், சேதமடைந்தும் உள்ளன.

சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான எறிகணை, பல்குழல் வெடிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களுக்குத் தப்புவதற்காக மக்கள் பெரும் அவலப்பட்டு பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்து ஓடுகின்ற சூழ்நிலையிலேயே, அவர்கள் மீது இவ்வாறான படுகொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் இருந்து கொண்டு வரப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 167 பேரின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளன.
 
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2009
வன்னியில் இருந்து கொண்டு வரப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் விபரம் என குறிப்பிட்டு வவுனியா வைத்தியசாலையின் நுழைவாயில் சுவரில் ஒட்டப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலில் 167 பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அன்றைய தினம் 226 நோயாளர்களும், 139 உறவினர்களான உதவியாளர்களும் அந்தச் சங்கத்தினரால் வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் வவுனியா பொது வைத்தியசாலை பொது மக்களுக்கான அதிகாரபூர்வமான அறிவித்தலின் மூலம் 167 பேரே வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் வவுனியாவுக்கு அழைத்து வரப்பட்ட 226 பேரில் மிகுதியானவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. நோயாளர்களுடன் உதவிக்காக வந்த உறவினர்களான 139 பேரும் வவுனியா நெளுக்குளம் இடைத்தங்கல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த 167 பேரின் விபரங்கள் வருமாறு:

விமலாதேவி (வயது46 )புதுக்குடியிருப்பு,வி.விந்துஷா (வயது28 )புதுக்குடியிருப்பு,சேஷனா (வயது03 ),எஸ். செல்வரஞ்சினி (வயது23) கிளிநொச்சி,என். பவளமணி (வயது52) விசுவமடு,ஜே. சரஸ்வதி (வயது47 )திருவையாறு,ஜே. சத்தியபாமா (வயது29 )அம்பாள்புரம் கிளிநொச்சி,எஸ். தர்சிகா (வயது15) தர்மபுரம்,எஸ். சரஸ்வதி (வயது63) சுதந்திரபுரம்,கே. கஜேந்தினி (வயது16) சுதந்திரபுரம்

ஆர். மகேஸ்வரி (வயது37) தேவிபுரம் ,பி. ஜெனிஸ் (வயது29) முள்ளியவளை,ஆர். நகுலன் (வயது33) விசுவமடு,கே. யோகலிங்கம் (வயது42) சுதந்திரபுரம்,சேனாதிராஜா (வயது62 )அனந்தர்புளியங்குளம் நெடுங்கேணி,எஸ். பேரின்பகரன் (வயது33 )பளை,பி. சஜீவன் (வயது16),திருநகர்,எஸ். கபிலன் (வயது17 )நட்டாங்கண்டல்,கே. இரட்னநாயகம் (வயது59 )உடையார்கட்டு,கே. வினோதன் (வயது34) மூங்கிலாறு.

எஸ். கிருஸ்ணகுமார் (வயது44) கோணாவில்,எம். இராஜேந்திரன் (வயது38) முரசுமோட்டை,ஆர். கதிர்காமநாதன் (வயது32) விசுவமடு,ஆர். குகதாசன் (வயது33) நல்லூர் பூனகரி,வை. யோகேஸ்வரன் (வயது30) கிழவிகுளம் பாலமோட்டை,எம். நாகராஜா (வயது45 )ஜெயபுரம்,அந்தோனி (வயது60),எஸ். செல்வரூபன் 28ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,எஸ். சுகந்தன் (வயது29) சுதந்திரபுரம் ,எம். ரவிச்செல்வன் (வயது32) சுதந்திரபுரம் ,எஸ். விக்கினராஜா (வயது52 )சுவிச்செந்தல், வட்டக்கச்சி.

இராமநாதன் பஞ்சலிங்கம் (வயது43) விசுவமடு,கே. நடராசா (வயது69) திருவையாறு,ரி. கிஷாந்த் (வயது12 )திருவையாறு,எம். செல்வராஜா (வயது50) முள்ளிக்குளம், மடு,வை. காண்டீபன் (வயது16) உடையார்கட்டு ,கே. ஜீவன் (வயது28) நெடுங்கேணி,ஆர். பார்த்திபன் (வயது14 )கற்சிலைமடு, பேராறு,எம். உதயபாலா 40 உடையார்கட்டு,கே. கனகலிங்கம் (வயது54) ஒலுமடு,எஸ். உதயசூரியன் (வயது42) கணேசபுரம், கிளிநொச்சி,பி. பிரவானந்தம் (வயது30) நெடுங்கேணி,ஆர். நிஷாந்தினி (வயது22) உடையார்கட்டு.

சிவகௌரி (வயது38) விசுவமடு,சுலக்ஷன் (வயது04) முள்ளியவளை,எம். அந்தோனியம்மா (வயது64 )கல்மடு,ஏ. வினிதா (வயது33 )கண்டாவளை,வை.வசந்தராணி (வயது42) விநாயகபுரம் கிளிநொச்சி,ஆர். பிரதீபா (வயது28 )வள்ளிபுனம்,ஆர். மதிவாணி (வயது08) ,தந்திரபுரம் ,ஜே. ஜெனிற்றா (வயது14) சுழிபுரம் யாழ்ப்பாணம்,கே. மதுஷா (வயது14 )கற்சிலைமடு ஒட்டுசுட்டான்,எல். ரதீஸ்வரி(வயது 24), 2ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,ஏ. மகேஸ்வரி (வயது18) தர்மபுரம் உழவனூர்,எம். அன்பரசன் (வயது07) வேலணை மேற்கு,எம். அகமதி (வயது11 )வேலணை மேற்கு,எம். சாந்தலட்சுமி (வயது39 )வேலணை மேற்கு.

பழனியம்மா (வயது50) 2ம் கட்டை திருநகர்,எம். பூபதியம்மா (வயது75) வள்ளிபுனம் ,என். நிரோஷா (வயது16 )வள்ளிபுனம்,ஏ. சீதா (வயது29 முழங்காவில்,எஸ். டிலக்ஷன் (வயது12) சுதந்திரபுரம் ,கே. யோகலிங்கம் (வயது44 )புதுக்குடியிருப்பு ,எஸ். குகாகரன் (வயது13 )புதுகுடியிருப்பு, (அனுராதபுரம் வைத்தியசாலை),ஜீ. ஞானசிறி (வயது28 )மூங்கிலாறு,ஏ. சில்வஸ்டர் (வயது33) ,இமானுவேல் ஆனந்தராஜ் (வயது48 )சுதந்திரபுரம் ,ஜோசப் லியோன் (வயது17) அம்பாள்குளம்,பி. மகேஸ்வரன் (வயது32 )புதுக்குடியிருப்பு,எம். ரவிசங்கர் (வயது14) வவுனிக்குளம் ,எஸ். ரிஷாலினி (வயது19 )சுதந்திரபுரம் ,ஐ. ஜெயராஜா (வயது42) வட்டக்கண்டல்.

எம். சைதனியா (வயது17) வட்டக்கச்சி,ஆர். துஷாந்தினி (வயது27 )முதலாம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,எஸ். ஆன் டிலக்ஷி (வயது11) வள்ளிபுனம்,எம். மதியழகன் (வயது07) முரசுமோட்டை,கே. திருமகள் (வயது32) முறிகண்டி,இ. கோவிந்தராஜன் (வயது30) குமுழமுனை,ஆர். மதிவண்ணன் (வயது12 )சாந்திபுரம் ,ஐ. சசிகரன் (வயது18 )வட்டக்கச்சி,பி. லனோஜன் (04 மாதம்) 2ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,ப. தனுஷா (வயது35) 2ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,பி. அருந்ததி (வயது42) முள்ளிவாய்க்கால்,என். பாலேஸ்வரன் (வயது31) 2ஆம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,எஸ். அன்னலட்சுமி (வயது25) பிள்ளையார் கோவிலடி உடையார்கட்டு,டி. வினோசிகா (வயது15) சுதந்திரபுரம் உடையார்கட்டு.

நவரத்தினம் விஜயரூபன் (வயது40 )தேவிபுரம்,எம். அமிர்தவள்ளி (வயது61), எம் கோபாலகிருஷ்ணன் (வயது46 )வவுனியா,கே. சனுஜா (வயது06 )சுதந்திரபுரம் ,என். ஆனந்தன் (வயது38 )சன்னாசிபரந்தன் ,எம். கிருஷ்ணன் (வயது05) வற்றாப்பளை,எம். கீர்த்தனன் (வயது13 )வற்றாப்பளை,எம். ஜெகதாம்பாள் (வயது31 )கிருஷ்ணபுரம் கிளிநொச்சி,பி. ரம்மியா (வயது17 )திருநகர்,எஸ். பிரதீபன் (வயது26) கண்ணகிபுரம் விசுவமடு,எஸ். மயூரன் (வயது15) மருதநகர்,எஸ். அபிநயா (1 1/2 வயது) வள்ளிபுனம் ,எஸ். செரான் 3 மாதம் மூங்கிலாறு,எம். மங்கலராஜா 35 ஜெயபுரம் ,எஸ். ராஜேஸ்வரி (வயது50 )சுதந்திரபுரம் ,எம். யதுஷா (வயது06) கிளிநொச்சி,ஆர். செல்வராஜா 33 மல்லாவி.

கே. கவிதாஸன் (வயது30 )புதுக்குடியிருப்பு,எஸ். ஜெயாநந்தன் (வயது27) 5ம் யுனிட் இராமநாதபுரம்,ஏ. ரகுவரன்(வயது 29) வற்றாப்பளை,பி. ரதி (வயது42) புதுக்குடியிருப்பு,டி. செபஸ்தியான்பிள்ளை (வயது51 )உடையார்கட்டு,எம். மகிழினி (வயது13) மருதங்கேணி தாளையடி,பி. மயூரிஷா (வயது09 )மருதங்கேணி தாளையடி,கே. யோகலிங்கம்(வயது 44 )புதுக்குடியிருப்பு,கே. அன்புராஜா (வயது61 )நெளுக்குளம் முகாம்,கே. குணசீலன் (வயது30 )நெளுக்குளம் முகாம்,வீ. விந்துஜன் (வயது04 )நெளுக்குளம் முகாம் ,சீ. கோமதி (வயது33 )பல்லவராயன்கட்டு,சீ. கிருஷா (வயது08 )பல்லவராயன் கட்டு கே. சோமசுந்தரம் (வயது83 )1ம் யுனிட் முரசுமோட்டை,ஏ. பிரன்சி (வயது28) நெத்தலியாறு,எம். ஸ்தேவாம் (வயது22) ஹட்சன் ரோட் வட்டக்கட்சி,எஸ். கமலாதேவி (வயது65) கனகபுரம் கிளிநொச்சி,பி. புஸ்பராணி(வயது 61) செட்டியார் தெரு பருத்தித்துறை,கே. சரோஜினிதேவி (வயது33) 3 வட்டாரம் முரசுமோட்டை,எஸ். சர்வானந்தன் (வயது26 )உருத்திரபுரம்,எஸ். அந்திரேஸ் (வயது60 )ராமநாதபுரம்,வி. காசிநாதன் (வயது34) கண்டாவளை,எஸ். குமுதினி (வயது11) லோட்டஸ் ரோட் வண்ணார்பண்ணை.

எஸ். சிந்துஜன் (வயது08 )லோட்டஸ் ரோட் வண்ணார்பண்ணை,எஸ். ஜிந்துஜன் (வயது06 )லோட்டஸ் ரோட் வண்ணாரபண்ணை,ப. தினேஷ்ரூபன் (வயது24) பள்ளிக்குடா பூனகரி,அல்வின் அனுரா (வயது29 )ஐயனார்கோவிலடி முரசுமோட்டை,பெரியசாமி இளநிதா (வயது10 )மாணிக்கபுரம் விசுவமடு,எஸ். ரவீந்திரன் சுதந்திரபுரம் விசுவமடு,கண்ணகியம்மா (வயது60 ரெட்பானா),எஸ். சுபாஜினி (வயது30) கணுக்கேணி,சண்முகரட்ணம் உதயகுமார் (வயது27) முரசுமோட்டை.

என். வினோத் (வயது16) விசுவமடு,பி. யோகலிங்கம் (வயது55) ராமநாதபுரம் ,கே. மாணிக்கம் (வயது32) தேவிபுரம் ,ரீ. தங்கராசா (வயது37) ரெட்பானா,ரீ. கணேஷ் (வயது10) ரெட்பானா,எஸ். தினோஜா (வயது13) உடையார்கட்டு,பி. யசோதாதேவி (வயது40) வள்ளிபுனம்,பி. கிருஜா (வயது20) திருநகர்,எஸ. கணேசமூர்த்தி (வயது49 )ராமநாதபுரம் ,எம். சுரேஷ் (வயது24 )முள்ளிவாய்க்கால்,எஸ். லக்சனா (வயது13 )கனகராயன்குளம் ,ஜே. மகேந்திரன் (வயது55 )புதுக்குடியிருப்பு,வை. விதுஷன் (வயது08) சுதந்திரபுரம் ,வை. தேன்மொழி (வயது50) ராமநாதபுரம்.

பி. யோகேந்திரன் (வயது25 )திருநகர்,ஏ. விஜயபாலகிருஷ்ணன் (வயது39 )யோகபுரம் மல்லாவி,ரீ. சுவர்ணன் (வயது25) முள்ளிவாய்க்கால்,வி. செல்லத்துரை (வயது70) கனகராயன்குளம்,எஸ். சிவதாசன் (வயது16) சுதந்திரபுரம்,எஸ். கந்தையா (வயது79) 4 ஆம் கட்டை பேராறு,கே. நாகமணி (வயது83 )புதுக்குடியிருப்பு,தம்பிப்பிள்ளை ராசரட்ணம் (வயது73) திருநகர் ,எஸ். கிருஷ்ணாதேவி (வயது57) வட்டக்கச்சி,ஜே. ஜெயராணி (வயது45) நெளுக்குளம் முகாம் ,எஸ். அகல்விழி (1 1/2 மாதக்குழந்தை) முதலாம் வட்டாரம் முள்ளியவளை,எஸ். சர்மிகா (வயது3) 1ம் வட்டாரம் முள்ளியவளை.

மேரி சதுர்ஷி (6 மாதம்) இரணைப்பாலை புதுக்குடியிருப்பு,ரீ. விதுஷன் (வயது4) வள்ளிபுனம்,எஸ். சுமிதா (வயது2) நெளுக்குளம் முகாம் ,ஆர். வித்தியா (வயது27) 2ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,ஜீ. தனலட்சுமி (வயது29) இரணைப்பாளை,சிவாஜினி (10 நாள் )வள்ளிபுனம் ,ஆர். பாக்கியராஜா (வயது55) இலுப்பைக்கடவை.

உடையார்கட்டு மருத்துவமனை மீது படையினர் எறிகணை தாக்குதல்: தாதி ஒருவர் பலி; ச.செ.சங்க பணியாளர் உட்பட 10 பேர் காயம்
 
[ செவ்வாய்க்கிழமை, 03 பெப்ரவரி 2009
தற்காலிகமாக இயங்கும் உடையார்கட்டு மருத்துவமனை (கிளிநொச்சி மருத்துவமனை) மீது நேற்று திங்கட்கிழமை  படையினர் செலுத்திய 3 எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததினால் மருத்துவமனை தாதி ஒருவர் பலியானார். மேலும் அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கப் பணியாளர் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.
எதுவித உதவிகளுமின்றி  அவதிப்படும் அப்பாவிப் பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வரும் புதுக்குடியிருப்பு ,  உடையார்கட்டு ஆகிய இரண்டு மருத்துவமனைகள் மீதும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணைத் தாக்குதல் அடுத்தடுத்து நடத்தியுள்ளனர்.
உடையார்கட்டு வைத்தியசாலை மீது நேற்றுப் பிற்பகல் 3 மணிக்கு மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலில் கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரான தவராசா கஜேந்தினி அந்த இடத்தில் துடிதுடித்து மரணமானார். மற்றும் இருவர் ஆஸ்பத்திரிக்குள் பலியாகினர்.
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ரி.சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் மூன்று ஷெல்கள் வீழ்ந்து வெடித்தன. இரண்டாவது ஷெல் வெடித்ததில் தாதிய உத்தியோகத்தர் கொல்லப்பட்டார். அங்கு நோயாளர்களுக்கு அவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோதே அவர் கொல்லப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்  காரணமாக காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்வதிலும் போக்குவரத்திற்கு பெரும் சிரமங்களுக்குள்ளாகியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுவகை எரிகுண்டுகள்; இன்று (செவ்வாய்) மட்டும் வன்னியில் 58 தமிழர்கள் படுகொலை 84 பேர் காயம்
 
[ செவ்வாய்க்கிழமை, 03 பெப்ரவரி 2009
"மக்கள் பாதுகாப்பு வலயம்" என தானே அறிவித்து இடம்பெயர்ந்த மக்களை சுதந்திரபுரம் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அடைக்கலம் புக வைத்த பின்னர் - சிறிலங்கா படைகள் தொடர்ச்சியாக நடத்தும் கடுமையான பீரங்கி எரிகுண்டுத் தாக்குதல்களில்  இன்று செவ்வாய் மட்டும் 58 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 84 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், இப்போது, சிறிலங்கா படையினர் பாவிக்கும் பீரங்கிக் குண்டுகள் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் ஒரு வகை எரிகுண்டுகளாக இருப்பதாக கூறப்படுகிறது

50 ஆயிரத்துக்கும் அதிகமான இடம்பெயர்ந்த மக்களும், மேலும் 10 ஆயிரம் வரையான ஏற்கனவே குடியிருந்த மக்களும் வாழ்ந்து வந்த சுதந்திரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை வரை சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இன்றைய இந்த தாக்குதலில் 58 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 84 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த பகுதியில் தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மீட்புப் பணிகள் சரிவர செய்ய முடியாத நிலை இருப்பதாகவும், மீட்புப் பணிகள் முழுமையாக முடிவடையும் போது கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களினதும் எண்ணிக்கை இதனைவிட அதிகமாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை நடைபெற்ற மீட்புப் பணிகளில் 55 பேரினது உடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், புதுக்குடியிருப்பு நுண்கலைக் கல்லூரி மீது இன்று காலை 8:30 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பீரங்கித் தாக்குதலில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

எரிக்கும் குண்டுகள்

இதேவேளை, சிறிலங்கா படையினர் தற்போது ஏவும் பீரங்கி எறிகணைகள் யாவுமே வீழ்ந்து வெடிக்கும் இடத்தில் பட்டதையெல்லாம் எரித்துக் கருக்கும் தன்மையுடையதாக  கூறப்படுகிறது

மனித உடல்களோ, மரங்களோ, கட்டடங்களோ, வாகனங்களோ எதுவாயிருந்தாலும் பற்றி எரிகின்றது. இதனால், அண்மைக்காலங்களில் எறிகணைத் தாக்குதலுக்கு இலக்காகின்றவர்கள் எல்லோருமே  உடல் கருகி உயிரிழப்பதுடன், காயமடைகின்றவர்களும் மிகக் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகின்றனர்

சிறிலங்கா படைகள் ஏவும் இந்த எறிகணைகள், எல்லாவற்றையும் எரித்துக் கருக்கும் தன்மை உடையவையாக இருப்பினும்  இந்த எறிகணைகள் சரியாக எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை இன்னமும் கண்டுபிடிக்க முடியாதுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வன்னியில் நேற்றும் (புதன்கிழமை) சிறிலங்கா படையினரின் எறிகணை தாக்குதலில் 13 தமிழர் பலி; 36 பேர் காயம்
 
[ வியாழக்கிழமை, 05 பெப்ரவரி 2009
வன்னியில் சிறிலங்கா படையினர் நேற்று புதன்கிழமை நடத்திய எறிகணை தாக்குதல்களில் 13 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேவேளை, வன்னியில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொல்லப்பட்ட தமிழர்களின் உடலங்கள் தொடர்ந்து வந்து குவிவதாகவும் அங்கிருந்து கடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னி பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறிலங்கா படையினரின் பரவலான எறிகணை வீச்சுக்கள் காரணமாக படுகொலையான 22 தமிழர்களின் உடலங்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன என கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரத்துறை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நேற்று புதன்கிழமை நான்காவது நாளாக நடத்திய கடுமையான எறிகணைத் தாக்குதலால் மருத்துவமனையின் பெரும்பாலான பகுதிகள் அழிக்கப்பட்டு விட்டன.

மருத்துவமனையின் முதன்மைப் பகுதிகளான வெளிநோயாளர் பிரிவு, அறுவைச் சிகிச்சைப் பிரிவு மற்றும் நோயாளர் விடுதிகள் என்பன எறிகணைத் தாக்குதல்களில் நாசமாகிவிட்டன. இதனால் அந்த மருத்துவமனை இனி இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க குழுப் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள் நிலைகொண்டிருந்த போதிலும் கூட மருத்துவமனை மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளைத் தாக்கக்கூடாது என்று அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழு மற்றும் அனைத்துலக நாடுகள் வலியுறுத்திய பின்னரும் சிறிலங்கா படையினர் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.
300 மீற்றர் பாதுகாப்பு வலயம் என்று அறிவித்த பின்னரும் மருத்துவமனை மீது தாக்குதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தாக்குதல்களின் போது, ஏற்கனவே சிறிலங்கா படையின் எறிகணைத் தாக்குதலில் காயமடைந்து புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். அ.வசந்தகுமார் (வயது 26) மற்றும் ப.மதன்ராஜ் (வயது 19) ஆகிய இருவருமே  படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர். அறுவைச் சிகிச்சைக் கூடம் மீது வீழ்ந்த சிறிலங்கா படையின் பீரங்கி குண்டிலேயே இவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கடந்த ஜனவரி 30 ஆம் நாள் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் படுகாயமடைந்து புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமலச்செல்வன் கஸ்தூரி (வயது 26) நேற்றைய தாக்குதலின் போது அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

அதேநிலையில் வன்னியில் நேற்று புதன்கிழமை சிறிலங்கா படையினரின்  இந்த எறிகணை வீச்சுக்களின் போது காயமடைந்த பெருமளவிலான பொதுமக்கள் ஆங்காங்கு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திரபுரம் மருத்துவமனைக்கு நேற்று மாலை 5:00 மணி வரையிலும் காயமடைந்த 44 பொதுமக்களும், உடையார்கட்டு மருத்துவமனைக்கு 14 பொதுமக்களும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் ஏராளமானோர் சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 
அதில் ஒரு வயதுடைய குழந்தை ஒன்றும் அடங்குவதாகவும், அந்த குழந்தையின் தாய் முன்னரே எறிகணை வீச்சில் இரண்டு கைகளையும் இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இறந்துவிட்டார். அவரது மற்றுமொரு குழந்தையும் ஏற்கெனவே பீரங்கி தாக்குதலில் இறந்து விட்டது எனவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அம்பலவன்பொக்கணை பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது நேற்று பிற்பகல் 1:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலின் போது 4 சிறுவர்கள் உட்பட 10 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 36 பேர் காயமடைந்துள்ளனர்.

சா.சுதாஸ் (வயது 05)
பாலசேகரம் கஜேந்திரன் (வயது 10)
பாலசேகரம் கஜானா (வயது 13)
செல்வநாயகம் கிளி (வயது 31)
சின்னப்பு இராசமலர் (வயது 56)
சின்னப்பு கெங்காதரன் (வயது 45)
பொ.ஜீவமலர் (வயது 53)
ஆகியோரே படுகொலை செய்யப்பட்டோர் ஆவர்.

கொல்லப்பட்ட மேலும் மூவரின் உடலம் சிதறிக் கிடப்பதினாலும், அவர்கள் இடம்பெயர்ந்து வந்தவர்களாய் இருப்பதனாலும் அவர்களின் பெயர் விபரங்களை உடனடியாக பெறமுடியவில்லை. அத்துடன்

மதன் மபிசன் (வயது 04)
தமிழ்மாறன் சர்மிகா (வயது 09)
கெங்காதரன் பாலதரணி (வயது 06)
கெங்காதரன் தர்மேஸ் (வயது 08)
சிவநேசன் (வயது 30)
த.சாந்தநேசன் (வயது 37)
கோ.மகேந்திரம் (வயது 47)
மகேந்திரம் இராசமலர் (வயது 47)
சௌந்தரராசா சறோஜினிதேவி (வயது 45)
அன்ரன் மேரிமலர் (வயது 30)
புஸ்பராசா ரேணுகாதேவி (வயது 28)
செல்வராசா புஸ்பராஜா (வயது 30)
தினகரன் சின்னத்தம்பி (வயது 55)
வல்லிபுரம் கோமதி (வயது 30)
தமிழ்மாறன் மேனகா (வயது 29)
தர்மராசா வாகீசன் (வயது 23)
யோசப் டில்லிமலர் (வயது 63)
செபமாலை விக்ரர் (வயது 72)
சின்னத்துரை தனராசா (வயது 50)
தனராசா புஸ்பராணி (வயது 45)     ஆகியோர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்.

 

blogger templates | Make Money Online