03 மார்ச் 2009 மாத்தளன் மருத்துவமனை உட்பட பல பகுதிகளில் எறிகணைத் தாக்குதல்: 73 தமிழர்கள் படுகொலை;160 பேர் காயம்
at சனி, ஏப்ரல் 30, 2011மாத்தளன் மருத்துவமனை உட்பட பல பகுதிகளில் எறிகணைத் தாக்குதல்: 73 தமிழர்கள் படுகொலை;160 பேர் காயம்
[ செவ்வாய்க்கிழமை, 03 மார்ச் 2009]

பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளன் மருத்துவமனையின் சுற்றயல் பகுதி மீது செவ்வாய்க்கிழமை காலை 5:15 தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 29 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளையில் புதுக்குடியிருப்பு, மாத்தளன், அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் பகுதிகளில் சிறிலங்கா படையினர் காலை 5:30 மணி தொடக்கம் பிற்பகல் 3:30 மணி வரை ஆட்லறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 44 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 82 பேர் காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களினதும் காயமடைந்தவர்களினதும் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)