மாத்தளன் மருத்துவமனை மீது இன்று (வியாழன்) அதிகாலை சிறிலங்கா படையினர் ஆர்பிஜி தாக்குதல்: 2 பேர் பலி; 11 பேர் காயம்
 
[ வியாழக்கிழமை, 26 மார்ச் 2009,  ]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் மருத்துவமனை மீது இன்று அதிகாலை சிறிலங்கா படையினர் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களை இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:15 நிமிடத்துக்கு மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நேரடியாக நடத்தினர்.
இத்தாக்குதலின் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 போ் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 3 பேர் மருத்துவமனைப் பணியாளர்கள் ஆவர்.
அத்துடன் 4 நோயாளர்களும் நோயாளர்களின் உதவியாளர்கள் 4 பேரும் காயமடைந்தவர்களில் அடங்குகின்றனர்.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மக்களுக்கு இருக்கும் ஒரேயொரு மருத்துவமனையான மாத்தளன் மருத்துவமனை மீதே இன்று அதிகாலை சிறிலங்கா படையினர் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online