வன்னியில் படையினரின் எறிகணை தாக்குதல்களில் இன்றும் (ஞாயிறு) 49 பொதுமக்கள் படுகொலை; 125 பேர் படுகாயம்
 
[ ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2009

வன்னியில் மக்கள் வாழ்விடங்களை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் 16 சிறுவர்கள் உட்பட 49 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 125 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வலைஞர்மடத்தில் உள்ள மக்கள் வாழ்விடங்களை நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொடக்கம் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 18 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மாத்தளன் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 8 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அம்பலவன்பொக்கணையில் உள்ள பிள்ளையார்கோவில் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களல் 10 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
முள்ளிவாய்க்கால், இடைக்காடு மற்றும் பச்சைப்புல்மோட்டைப் பகுதிகளை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் 13 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட அகோர  எறிகணைத் தாக்குதல்களில் 27 சிறுவர்கள் அடங்கலாக 125 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர் விபரம் வருமாறு:
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான
புலேந்திரமகாராஜா ராஜஸ்ரீ (வயது 30)
புலேந்திரமகாராஜா புவிராசி (வயது 08)
புலேந்திரமகாராஜா பைந்தனா (வயது 07)
புலேந்திரமகாராஜா வைஸ்ணவி (வயது ஒன்றரை மாதம்)
குலசேகரம் கந்தையா (வயது 65)

பாலசுந்தரம் யுவராஜ் (வயது 49)

பார்த்தீபன் (வயது 37)

தவராசா டினு (வயது 03)

தம்பிராசா ஜோன் நிவாஸ் (வயது 26)

தியாகசிங்கம் கருணாநிதி (வயது 53)

கோவிந்தசாமி (வயது 63)

சுதாகரன் சுதர்மன் (வயது 12)

மரியதாஸ் கேதீஸ்வரி (வயது 29)

அன்ரனி மரியமலர் (வயது 32)

காந்தரூபன் ஞானம்மா (வயது 35)

குகநேசன் சுசீலா (வயது 45)

கனகசபை கந்தசாமி (வயது 45)

கனகசபை அழகம்மா (வயது 73)

கோவிந்தசாமி இராசம்மா (வயது 53)

கறுப்பையா தர்மலிங்கம் (வயது 55)

வேலாயுதம் சுதாகர் (வயது 32)

தேசிங்கு கருணாநிதி (வயது 53)

கவிபாலன் சயந்தன் (வயது 07)

கந்தையா புஸ்பராசர் (வயது 46)

தவராசா டிலானி (வயது 03)

தவராசா தர்மிளா (வயது 19)

தவராசா தீபமலர் (வயது 40)

தவராசா நிலக்சன் (வயது 12)

கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 23)

கணேசலிங்கம் யமுனாராணி (வயது 48)

தர்மலிங்கம் தவராசா (வயது 38)

காந்தரூபன் (வயது ஒன்றரை )

காந்தரூபன் லதா (வயது 34)

செ.புஸ்பராணி (வயது 48)

கந்தன் தம்பையா (வயது 76)

மருதன் கேதாரா (வயது 20)

சேதுமாதவன் கிருஸ்ணன் (வயது 32)

கார்மேகன் காருண்யா (வயது ஒன்றரை)

தேவிபாலன் மதுசன் (வயது 5 மாதம்)

வே.சின்னத்தம்பி (வயது 35)

பா.குணாளன் (வயது 12)

விஜிதரன் புவிதா (வயது 08)

மதுரவாணன் பார்கவி (வயது 10)

ஞானராஜ் மருதன் (வயது 07)

கணேசலிங்கம் புவிதன் (வயது 03)

கவிராசன் கவிதா (வயது 04)

கேவின்ராஜ் பிருந்தன் (வயது 05)

கோபாலபிள்ளை பார்கவி (வயது 25)

தம்பிப்பிள்ளை மார்க்கண்டு (வயது 30) ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.

0 Comments:

Post a Comment



 

blogger templates | Make Money Online