02-MAY-2009 பாதுகாப்பு வலயம் மீதான குண்டு வீச்சுப் படங்கள் அம்பலம 02-MAY-2009
at திங்கள், ஏப்ரல் 25, 2011பாதுகாப்பு வலயம் மீதான குண்டு வீச்சுப் படங்கள் அம்பலமானது குறித்து ஐ.நாவிடம் அரசு ஆட்சேபம்விசாரணை நடத்துமாறு பிரதிநிதி புஹுனேயை அழைத்து அமைச்சர் சமரசிங்க வலியுறுத்து
[ சனிக்கிழமை, 02 மே 2009, ]
உணர்ச்சிகரமான தகவல்கள் ஐ.நாவினால் அம்பலப்படுத்தப்படுவது இது முதல் தடவை அல்ல முன்னர் வன்னிப் பிரதேசத்தில் மோதல்களின் போது இறந்தவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடும் அறிக்கையும் ஊடகங்களுக்கு அறியவிடப்பட்டது; தகவல் அம்பலமாக்கப்பட்டது.
செய்மதிப் படங்கள் அம்பலமானது குறித்து ஐ.நா விரைந்து விவாதங்களை நடத்தி நிலைமையை தெளிவுபடுத்த வேண்டும்; விரைந்தும் தரவேண்டும் ஐக்கிய நாடுகள் சபை தன் மீது தானே ஒளி பாய்சி உண்மையைக் கூறும் கட்டம் வந்திருக்கிறது என்று அமைச்சர் சமரசிங்கா கூறினார்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் அரசு அறிவித்த பாதுகாப்பு வலயத்துக்குள் தஞ்சம் அடைந்த பின்னர் விமானப் படையினர் ஜெட் விமானங்களால் குண்டு வீச்சு நடத்திய போது ஐக்கிய நாடுகள் சபையினால் அந்தரங்கமான முறையில் பிடிக்கப்பட்ட செய்மதிப்படங்கள் ஊடகங்களுக்கு அம்பலமாக்கப்பட்டதை தொடர்ந்தே அமைச்சர் சமரசிங்கா ஐ.நா பிரதிநிதி புஹுனேயை அழைத்து விளக்கம் கேட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணப் பிரிவான "யுஎன்ஓசற்"" (unosat) ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி எடுக்கப்பட்ட செய்மதிப்படங்கள் இப்போது பத்துக் கிலோ மீற்றர் தூரத்துக்கும் குறுகியுள்ள சிறு நீளத்துண்டு கடற்கரையையும் தென்னந்தோட்டங்களும் கொண்ட பகுதியை காட்டுக்கின்றது.

0 Comments:
Subscribe to:
கருத்துரைகளை இடு (Atom)
